Friday, October 30, 2020

DSE- அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அஞ்சல் வழியில் உயர்கல்வி பயில அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர்களே அனுமதி வழங்கலாம் என்ற பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள்: 12.04.2001. (இணைப்பு: அரசாணை எண், 328, P & AR Department , நாள்: 09.04.1983.)



 


கற்போம் எழுதுவோம் இயக்கம் புதிய வயது வந்தோ ர் கல்வித் திட்டம் செயல்படுத்துதல் 5.11.20 அன்று காணொளி வாயிலானா கூட்டம் நடத்துதல் சார்ந்து இயக்குநரின் செயல்முறைகள்.


Add caption

 

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 196 பேரை நிரந்தரமாக தடை (permanently debarred) செய்யப் பட்ட வர்களின் பெயர் பட்டியல் trb வெளியீடு.

CLICK HERE TO DOWNLOAD-TRB DEBARRED LIST

Thursday, October 29, 2020

Re-Employment of retired employees- Revised instructions issued -Regarding- Finance Department


 

IFHRMS உடன் இணைக்கப்படுவதால் CPS "Missing Credits" விபரங்களை 10.11.2020க்குள் சரிசெய்ய அரசுத் தகவல் மைய (Govt. Data Centre) ஆணையர் உத்தரவு!!!



 

Go No 438, Dated 29.10.2020, மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 ℅ இட ஒதுக்கீடு அளிக்க அரசாணை வெளியீடு

 CLICK HERE TO DOWNLOAD- G.O 438


Provisional certificate இருந்தாலே 2 ஆண்டுக்குள் பட்டய சான்று சமர்ப்பிக்க வேண்டும் என நிபந்தனைக்கு உட்பட்டு ஊக்க ஊதியம் வழங்க அனுமதிக்கலாம்.


 

DSE - பள்ளிக்கல்வி -ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்கள் விவரங்கள் கோருதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.




 

பெரியார் பல்கலைக்கழகம் மூலம் வழங்கப்படும் M.Phil., பகுதி நேர படிப்பு பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டது எனவும் இது தொலைதூரக் கல்வியின் (Distance Mode) கீழ் வராது எனவும் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் அறிவிப்பு!!!


 

வயதுவந்தோர் கல்வி – கற்போம் எழுதுவோம் திட்டம் – நடுநிலைப்பள்ளிகள்- கல்வி மையங்கள்- தெரிந்துகொள்ள வேண்டிய விவரங்கள் – பயிற்சி கால அட்டவணை – பாதுகாக்க வேண்டிய படிவங்கள்….

 பயிற்சி கால அட்டவணை மற்றும் படிவங்கள்... 

CLICK HERE TO DOWNLOAD PDF

2021 ஆம் ஆண்டின் பொது விடுமுறைக்கான அரசாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு - அரசாணை எண்: 554, நாள்: 27-10-2020...

 அரசாணை எண்: 554, நாள்: 27-10-2020 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


ஒருவரின் ஊக்க ஊதிய உயர்வுக்குரிய பணப்பலன் 10.03.2020க்கு முன், துறையால் அனுமதிக்கப்பட்டு பின் தடைபட்டிருந்தால் அவர்களுக்கு தற்போது நிதித்துறை அனுமதி பெற வேண்டியதில்லை...

 ஊக்க ஊதிய உயர்வு நிகழ்வில் தெளிவுரையாக வந்துள்ள அரசாணை எண்: 116, நாள் 15.10.2020 இல் வரிசை எண்:9 (a)ல் அரசாணை வெளியிடப்படுவதற்கு முன்னர்  உயர்கல்வித் தகுதி பெறப்பட்டு துறையால் பணப்பலன் பெற அனுமதி ஆணை வழங்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு தற்போது நிதித்துறை அனுமதி பெற வேண்டியதில்லை. அவர்களுக்கு கருவூலப்பட்டியலை தற்போது அனுமதிக்கலாம் என கீழ்கண்டவாறு ஆணை கூறுகிறது.

Point raised for clarification:

         9)Whether the bills for sanction of advance increment for acquiring higher qualification may be passed/allowed by the concerned pay and account office/Treasury office, after the date of issue of the Government order 1st read above?

Clarification

  9(a) The bill passing authority may pass the bills after due verification of the bills as follows:

    Whether the said higher qualification was acquired prior to the date of issue of the government order 1st read above and the proceedings/orders issued for sanction of advance increment is based on previous general orders issued by the department concerned and prior to the date of issue of the government order 1st read above.

           எனவே அரசாணை எண் 116 நாள் 16.10.2020ன் பாரா 9க்கு இணங்க  அரசாணைஎண் 37 நாள் 10.03.2020 வெளியிடப்படுவதற்கு முன்னர் ஒருவருக்கு ஊக்கஊதிய உயர்வு பெற சம்மந்தப்பட்ட துறையால் பணப்பலன் பெற ஆணைகள் வழங்கப்பட்டு பின்னர் கருவூலகத்தால் தடைபட்டிருந்தால் தற்போது நிதித்துறை அனுமதி பெறாமலே ஊக்க ஊதிய உயர்வினையும் அதற்க்குரிய பணப்பலனையும் அன்னாருக்கு அனுமதிக்கலாம்.

>>> அரசாணை எண். 116, நாள் : 16-10-2020 ஐ தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் PG Diploma in English Language Teaching கல்விக்கு முதுகலை ஆசிரியர்களுக்கு 2வது ஊக்க ஊதிய உயர்வு வழங்க வழிவகை இல்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல்...


 

ஆசிரியர்களின் ஊதிய நிர்ணயம், தேர்வுநிலை, சிறப்பு நிலை மற்றும் ஊக்க ஊதியம் தொடர்பான அரசாணைகளின் பட்டியல்...





பணி நியமனத்திற்கு முன் பெற்ற உயர்கல்வித் தகுதிக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்க இயலாது என ஆணை எதுவும் பிறப்பிக்க வில்லை.. அரசு செயலாளர் விளக்க கடிதம்





DSE PROCEEDINGS:போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 551 உடற்கல்வி ஆசிரியர்களுக்கு 03.11.2020 மற்றும் 04.11.2020 ஆகிய நாட்களில் பணிநியமன கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவிப்பு !

        CLICK HERE-TRB-P.E.T- REVISED PROVIONAL SELECTION LIST

CLICK HERE TO DOWNLOAD- DIR.PRO

Tuesday, October 27, 2020

ஊக்க ஊதிய உயர்வு - செலவினம் குறித்த இடத்தில் 31.10.2020 வரை நிலுவைத்தொகை துல்லியமாக கணக்கிட வேண்டும் - M.Phil., பயில DSE / CEO முன் அனுமதி வேண்டும் - உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களை பொறுத்த வரை பள்ளித் தாளாளர் அனுமதி சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலரிடம் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும் - மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்

CLICK HERE TO DOWNLOAD-TRICHY CEO PRO

G.O.(M.S)NO :382 .dated:24.10.2020. -கூடுதல் பணிநியமத்திற்கு (Creation of New Posts) மட்டுமே தடை - ஏற்கனவே காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தடை இல்லை அரசாணையில் திருத்தம்!!!

 ECONOMY in Expenditure- CORONA-(COVID-19)-Ban on Creation new Posts in Government Departments- Amendment - Orders- issued. G.O.(M.S)NO :382 .dated:24.10.2020.

CLICK HERE TO DOWNLOAD THE G.O 382

10,11,12 ஆம் வகுப்பு துணைத் தேர்வு 2020 - தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி அறிவிப்பு.

 


செப்டம்பர் / அக்டோபர் 2020 மாதத்தில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு | மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு துணைத்தேர்வுகள் முடிவுகளை தேர்வர்கள் மதிப்பெண் பட்டியல்களாகவே ( Statement of Marks ) பதிவிறக்கம் செய்துக் கொள்ளுதல் , விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறைகள் குறித்து செய்திக்குறிப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.


10,+1 & +2 Result - Septer 2020 Supplemetary Exam Full Details - Download here...

Saturday, October 24, 2020

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் மூலம் வழங்கப்படும் M.Phil., பகுதி நேர படிப்பு பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டதா ? இது தொலைதூரக் கல்வியின் (Distance Mode) கீழ் வருமா ? அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக பதிவாளர் பதில்

CLICK HERE TO DOWNLOAD- M.PHIL REGISTRAR LETTER

புதிய வயது வந்தோர் கல்வித் திட்டம் கற்போம் எழுதுவோம் இயக்கம் என்ற புதிய திட்டம் செயல்படுத்துதல் - வழி காட்டு நெறிமுறைகள் சார்ந்து இயக்குநரின் செயல்முறைகள்

Click here download proceeding 

சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை பள்ளிகள் மூலமாக மாணவர்கள் எவ்வாறு பெறுவது? முழுமையான விவரம் ( விண்ணப்பிப்பதற்கு கடைசி தேதி 31.10.2020 )

 தமிழ்நாட்டில் வாழும் சிறுபான்மையினர் இனத்தவரான கிறித்தவர் , இஸ்லாமியர் , சீக்கியர் , புத்த மதத்தினர் , பார்சி மற்றும் ஜெயின் மதத்தைச் சார்ந்து அரசு , அரசு உதவி பெறும் மைய / மாநில அரசால் அங்கிகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 1 முதல் 10 - ம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியர்களுக்கான பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகையும் , 11 - ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை ( ஐடிஜ.ஜடிசி , வாழ்க்கை தொழிற்கல்வி , பாலிடெக்னிக் , செவிலியர் / ஆசிரியர் பட்டயப்படிப்பு , இளங்கலை , முதுகலை பட்டப்படிப்புகள் உட்பட ) பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் மற்றும் தொழிற்கல்வி , தொழிற்நுட்ப கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின் WWW.Scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை ( NSP ) இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 


• 2020-2021 - ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை திட்டத்தினை தேசிய கல்வி உதவித்தொகை இணையம் மூலம் ( NSP ) மாணவ / மாணவியர்கள் விண்ணப்பிப்பதற்கு 31.10.2020 வரை கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து பள்ளி கல்வி நிலையங்களிலும் தேசிய கல்வி உதவித்தொகை இணையத்திற்கென தனியே ஒருங்கிணைப்பாளர்கள் ( Institute Nodal officer ) நியமனம் செய்யப்பட வேண்டும் . 


• பள்ளி / கல்வி நிலையத்தின் ஒருங்கிணைப்பு அலுவலர் பயனாளர் குறியீடு மற்றும் புதிய கடவுச்சொல் ( Login Credentials ) பயன்படுத்தி தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் உள் நுழைந்து ( Login ) அடிப்படை விபரங்களை ( வகுப்பு , கல்வி கட்டணம் மற்றும் பிற விபரங்கள் ) பூர்த்தி செய்து கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை ஆன் லைன் மூலம் சரிபார்க்க துவங்கலாம் . 

 பள்ளி கல்வி நிலையத்தின் உள் நுழைவு விபரங்கள் ( Login Credentials ) ஏற்கனவே பணிபுரிந்த பள்ளி / கல்வி நிலையத்தின் ஒருங்கிணைப்பு அலுவலரால் பகிரப்படவில்லையெனில் பள்ளி / கல்வி நிலைய தலைவரால் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கடிதம் அளிக்கப்பட்டு SMS மூலம் பெற்றுக்கொள்ளலாம் . 2020-2021 - ம் கல்வியாண்டிற்கு மேற்படி கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் ( பள்ளி படிப்பு , பள்ளி மேற்படிப்பு , தகுதி ( ம ) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை ) 1,35,127 மாணவ / மாணவியர்களுக்கு புதிய கல்வி உதவித்தொகை வழங்க அரசால் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது . மாணவ / மாணவியர்களுக்கு கல்வி நிலையங்கள் DISE / AISH குறியீட்டு எண்ணை தெரிவித்து தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்கு அறிவுறுத்த வேண்டும்.


 பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் ஒரு இலட்சத்திற்கு மிகாமலும் , பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகைக்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூபாய் இரண்டு இலட்சத்திற்கு மிகாமலும் மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.


 மாணவ / மாணவியர்களின் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை பெறும் பொழுது கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடமிருந்து வருவாய் துறை வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட வருமானச்சான்றிதழ்களை கட்டாயம் பெற்று பராமரிக்க வேண்டும் . மாணவ / மாணவியர்கள் வருவாய்துறையிடமிருந்து பெறப்பட்ட வருமானச்சான்றிதழின் அடிப்படையில் கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தில் வருமானம் பூர்த்தி செய்ய வேண்டும் . 


• கல்வி நிறுவனங்கள் மாணவ / மாணவியர்களின் சரிபார்க்கப்பட்ட கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களின் ஒருங்கிணைந்த பட்டியல் ( List of Verfied Application ) கல்வி நிலைய தலைவரின் ஒப்புதல் பெற்று மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்  நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே நல மாணவ / மாணவியர்களின் விண்ணப்பங்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலரால் இணையதளத்தில் சரிபார்க்கப்படும் . 


* மாணவ / மாணவியர்களின் ஒருங்கிணைந்த பட்டியல் சமர்ப்பிக்கப்படாத கல்வி நிறுவனங்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் பட்சத்தில் மாணவ / மாணவியர்களுக்கு கல்வி நிறுவனங்களே முழு பொறுப்பாகும் . எனவே கல்வி நிறுவனங்கள் வரப்பெற்ற மாணவ / மாணவியர்களின் விண்ணப்பங்களை சரிபார்க்கப்பட்டு அதற்கான ஒருங்கிணைந்த பட்டியலை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் . 


புதுப்பித்தல் : 


புதுப்பித்தல் உதவித்தொகைக்கான குறைந்த பட்சம் 50 % மதிப்பெண்களுக்கான தகுதி கோவிட் -19 தொற்று நோயை கருத்தில் கொண்டு நடப்பு கல்வியாண்டில் தளர்த்தப்பட்டுள்ளது மற்றும் முந்தைய ஆண்டின் இறுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ / மாணவியர்கள் மேற்படி கல்வி உதவித்தொகைக்கு புதுப்பித்தலுக்கு தகுதியானவராக கருதப்படுவர். 


இணையதளத்தில் மாணவ / மாணவியர்கள் விண்ணப்பிப்பதற்கு தேவையான ஆவணங்கள் .


1.மாணவ / மாணவியர்களின் புகைப்படம். 

2.கைபேசி / மின்னஞ்சல் முகவரி 

3.முந்தைய ஆண்டு மதிப்பெண் பட்டியல்

4.ஆதார் நகல்

5.சாதிச்சான்றிதழ்

6.வருமானச்சான்றிதழ்

7.வங்கி கணக்கு நகல் . 


பொதுவான வழிமுறைகள் : 


பள்ளி படிப்பை பொறுத்தவரை கல்வி நிறுவனங்கள் மாணவ / மாணவியர்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஏதுவாக " தத்தம் கல்வி நிறுவனங்களின் அனுபவம் வாய்ந்த கணிணி ஆசியர்கள் மூலம் வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கலாம்.


• சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை விண்ணப்பிப்பது குறித்து கல்வி நிறுவனங்களின் அறிவிப்பு பலகையில் கட்டாயம் விளம்பர இடம் பெற்றிருக்க வேண்டும் என்று சுற்றறிக்கை கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


புதிய விண்ணப்பங்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை நிர்ணயிக்கப்படும் எண்ணிக்கையில் மட்டும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மாணவ / மாணவியர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் மட்டும் மதிப்பெண் அடிப்படையில் மத்திய அரசால் தேர்வு செய்யப்படுவார்கள் . புதிய விண்ணப்பங்களில் 30 % மாணவியருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 


கல்வி உதவித்தொகை புதுப்பித்தல் விண்ணப்பங்களுக்கு விலக்கு ஏதும் கிடையாது . புதுப்பித்தல் மாணவ / மாணவியர் அனைவருக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.


விண்ணப்பிக்கும் முறை :


* புதியதாக விண்ணப்பிக்கும் மாணவ / மாணவியர்கள் ( WWW.Scholarships.gov.in ) என்ற இணையதள முகவரியில் New User / Register என்பதை தெரிவு செய்து முதன்மை விவரங்களை பதிவு செய்ய வேண்டும். மாணவ / மாணவியர்களால் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண் இணையதளத்தால் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் மட்டுமே விண்ணப்பம் செய்ய அனுமதிக்கப்படும். பதிவு செய்யப்படும் கைபேசி எண்ணை மாணவ / மாணவியர்கள் எந்த காரணத்தை முன்னிட்டு மாற்றக்கூடாது.


• புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கும் மாணவ / மாணவியர்கள் கல்வி பயிலும் பள்ளிகளை மாற்ற இயலாது. கடந்தாண்டு கல்வி உதவித்தொகை பெற்ற மாணவரே புதுப்பித்தலுக்கு தகுதி உடையவர் ஆவார். 


• கல்வி உதவித்தொகை பெற்று வரும் மாணவர் / மாணவியர் அதே கல்வி நிலையத்தில் பயிலும் வரை புதுப்பித்தல் செய்ய முடியும். கல்வி மாறுதல் ஆகும் சமயத்தில்  மாணவ / மாணவியர்கள் ஏற்கனவே உள்ள விண்ணப்பிக்க விண்ணப்பத்தினை நிராகரிப்பு செய்து விட்டு புதியதாக வேண்டும். மாணவ / மாணவியர்கள் தேசிய மையமாக்கப்பட்ட வங்கி கணக்குகளையே சமர்ப்பிக்க வேண்டும். மேலும் வங்கி கணக்குடன் ஆதார் எண் கட்டாயமாக இணைப்பு செய்திருக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் மாணவ / மாணவியர்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் சரிபார்ப்பு செய்து அனுப்பும் போது மாணவ / மாணவியர் தங்கள் கல்வி நிலையத்தில் பயில்கிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும். 


• மாணவ / மாணவியர்களின் விண்ணப்பங்கள் தவறுதலாக வரப்பெற்ற கல்வி நிறுவனங்கள் மாணவ / மாணவியர்களின் விண்ணப்பங்களை இணையதளத்தில் Defect கொடுத்த உடன் தொடர்புடைய மாணவ / மாணவியர்களின் கைபேசி எண்ணில் தெரிவித்து விண்ணப்பத்தை Withdraw செய்து புதியதாக விண்ணப்பிக்க அறிவுறுத்த வேண்டும். 


• கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கப்பட்ட மாணவ / மாணவியர்களின் விண்ணப்பங்கள் கல்வி நிறுவனங்கள் சரிபார்க்கப்படாத பட்சத்தில் கல்வி நிலையங்களே அதற்கான பொறுப்பேற்க வேண்டும். 

* மாணவ / மாணவியர்கள்  கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்கும் பொழுது வங்கி கணக்கு விபரங்களை கவனத்துடன் உள்ளீடு செய்ய வேண்டும் . பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களின் விபரங்களை எந்த நிலையிலும் மாற்றவோ , திருத்தவோ இயலாது . . கல்வி நிறுவனங்கள் தங்களின் கல்வி நிலையத்தில் பயிலும் மாணவ / மாணவியர்களின் விண்ணப்பங்களை மட்டுமே சரிபார்த்து இணையதளத்தில் அனுப்ப வேண்டும். தவறுதலாக வரும் மாணவ / மாணவியர்களின் விண்ணப்பங்களை கல்வி நிறுவனங்க நிராகரிக்க வேண்டும். 


• மாணவ / மாணவியர்களின் விண்ணப்பங்களை கல்வி நிலையங்கள் நியமிக்கப்பட்ட ஒருங்கிணைப்பு அலுவலரின் கைபேசி எண்ணில் மட்டும் விண்ணப்பங்களை சரிபார்க்கப்பட வேண்டும். எந்தவித காரணங்களை முன்னிட்டும் Browsing Centre- ல் உள்ள நபரின் கைபேசி எண்ணிற்கு விண்ணப்பங்கள் சரிபார்க்க கூடாது .


* மாணவ / மாணவியரின் ஆண்டு வருமானம் ரூ .72000 / -க்கு குறைவாக வரும் கல்வி நிறுவனங்களில் வருமானச்சான்றிதழ் சரியான முறையில் பெறப்பட்டுள்ளதா என்பதை மாவட்டத்தில் அதற்காக குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள ளப்படும் . மாணவ / மாணவியரின் வினாணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு வங்கி கணக்கில் கல்வி உதவித்தொகை வரப்பெற்ற விபரத்திற்கு மாணவ / மாணவியர் பதிவு மேற்கொள்ளப்பட்ட உள் நுழைவில் ( Registration / Login ) மாணவ / மாணவியரின் கடவுச் சொல்லை சமர்ப்பித்து தெரிந்துக்கொள்ளலாம் அல்லது ( NSP Home Page- ல் Sanction List ) தேர்வு செய்யப்பட்ட பட்டியலில் மாணவ / மாணவியரின் கைபேசி எண்ணை பதிவு செய்து தெரிந்துகொள்ளலாம். எந்த காரணத்தை முன்னிட்டும் கல்வி நிலையங்கள் மாணவ / மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வரப்பெறாத பட்சத்தில் அவர்களின் பெற்றோர்களை இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்ககூடாது . அதற்கான தெளிவான விபரத்தை கல்வி நிலையங்களின் அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும். மாணவ / மாணவியர் விண்ணப்பிக்கும் காலம் முடிவடைந்ததும் கல்வி நிறுவனங்கள் தங்களது கல்வி நிறுவன Login- ல் உள் நுழைந்து மாணவ / மாணவியரின் விண்ணப்பங்களை சரிபார்த்து { District Nodal Officer login- ல் ) அனுப்பியவுடன் சரிபார்ப்பு பட்டியலை இவ்வலுவலகத்தில் உடன் சமர்ப்பிக்கும் பட்சத்தில் மாணவ / மாணவியரின் விண்ணப்பகளை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் சரிபார்க்க இயலும் . 


• கல்வி நிறுவனங்கள் மாணவ / மாணவியர்கள் விண்ணப்பங்களை கல்வி நிறுவன Login- ல் சரிபார்ப்பு செய்து அனுப்பவில்லை என்றால் மாணவ / மாணவியரின் கல்வி நிறுவன Login- ல் நிலுவையில் இருக்கும் . 


• புதியதாக விண்ணப்பிக்கும் மாணவ / மாணவியர் அனைவருக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்பது கட்டாயம்மில்லை அரசால் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டும் வருமானம் மட்டும் முந்தைய ஆண்டின் மதிப்பெண் அடிப்படையில் மைய அரசால் நேரிடையாக தேர்வு செய்யப்படும்.

G.O 116-DATE- 15.10.2020-உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ரத்து -ஆசிரியர்கள் , மருத்துவர்கள் ,பொறியாளர்கள் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும்- பணியாளர்கள் மற்றும் சீர்திருத்த துறை விளக்கம்

 Advance increments Dispensation/cancellation of the scheme of sanction of advance increment in all departments orders issued further calification.CLICK BELOW LINK

CLICK HERE TO DOWNLOAD THE G.O 116-DATE-15.10.2020

அரசாணை எண்: 37, நாள்: 10-3-2020-க்கு தெளிவுரையாக வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண்: 116, நாள்: 15-10-2020ல் அளிக்கப்பட்டுள்ள முக்கியமான விளக்கங்கள்...

 அரசாணை 37-ஆனது வெளியிடப்பட்ட நாளான 10-03-2020 முதல் நடைமுறைக்கு வருகிறது.

💥 10-03-2020 க்கு பின்னர் பணியில் சேரும் அரசு ஊழியருக்கு ஊக்க ஊதிய உயர்வு அல்லது முன் ஊதிய உயர்வு கிடையாது.

💥 10-03-2020க்கு முன் உயர்கல்வி அல்லது துறைத் தேர்வுகள் தேர்ச்சி பெற்று, நிர்வாக காரணங்களுக்காக அல்லது தனிநபரின் தாமதமான கோரிக்கை காரணமாக ஆணை வழங்கப்படாத நிலையில், அவர்களுக்கு அரசாணை 37ல் பத்தி 6 உட்பிரிவு vi இல் கூறப்பட்டுள்ள நடைமுறையின்படி 31.03.2021க்கு முன் ஆணை வழங்கப்பட வேண்டும்.

💥 அரசாணை 37 ஆனது ஆசிரியர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து அரசு துறையில் பணிபுரியும் அரசு பணியாளர்களுக்கும் பொருந்தும்.

💥 முன் ஊதிய உயர்வும், ஊக்க ஊதிய உயர்வும் ஒன்றுதான்.

💥 ஊக்க ஊதிய உயர்வு/ முன் ஊதிய உயர்வு தொடர்பாக 10-03-2020க்கு முன் பிற துறைகளில் வெளியிடப்பட்ட அரசாணைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது ஊதியப் பட்டியல் ஒப்பளிக்கும் அலுவலர் உயர்கல்வி தகுதியும், அதற்கான ஊக்க ஊதிய உயர்வு அனுமதிக்கும் ஆணையும் குறிப்பிட்ட தேதிக்கு (10-03-2020) முன்னர் பெறப்பட்டுள்ளதா  என்பதையும், அரசாணை 37ல் பத்தி 6 உட்பிரிவு vi இல் கூறப்பட்டுள்ள நடைமுறையின்படி சரியானதுதானா என்பதையும் உறுதி செய்து  கொண்டு ஊதியப்பட்டியல் அனுமதிக்கலாம்...

💥இந்த அரசாணை ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என்பதை மட்டும் மேலோட்டமாக பார்த்து விட்டு கடந்து செல்லாமல், 10.03.2020க்கு முன்னர் உயர்கல்வி பெற்றவர்கள், தற்போதைய அரசாணையில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளின்படி, ஊக்க ஊதியம் பெற முயற்சிக்க வேண்டும். அநற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள தேதி 31.03.2021. 

தெளிவுரை வரிசை எண்: 7 மற்றும் 9 ஐ கவனிக்கவும்.


ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சியின் செல்லுபடியாகும் காலத்தை 7 ஆண்டுகளில் இருந்து ஆயுட்காலமாக (Life Time) மாற்றி தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைகழகம் சுற்றறிக்கை

CLICK HERE DOWNLOAD 

விஜயதசமி அன்று மாணவர் சேர்க்கை குறித்து தொடக்க கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள்