5,8 ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வுநடத்துவது என்ற அரசின் முடிவுக்குக்கல்வியாளர்கள் உட்பட பல்வேறு தரப்பிலிருந்துஎதிர்ப்புக் கிளம்பியதை அடுத்து, இந்த ஆண்டுபொதுத் தேர்வு நடத்தப்படமாட்டாது எனத் தமிழகஅரசு அறிவித்துள்ளது.
`இடை நிற்றல் இல்லாத நிலை ஏற்படுத்திட, எட்டாம்வகுப்பு வரை பொதுத்தேர்வு நடத்துவதில்லை’ என்றமுறை இருந்துவருகிறது. இந்த நிலையில் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடத்தமுனைந்தது தமிழக அரசு. பள்ளிக்கல்வித் துறைஅமைச்சர் செங்கோட்டையன், ``5 மற்றும் 8-ம் வகுப்புமாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடத்துவதுகுறித்து தமிழக அமைச்சரவை முடிவெடுக்கும்"என்று தெரிவித்திருந்தார். ஆனால், அதற்கு முன்பேபள்ளிக்கல்வித் துறை, முதன்மைக் கல்விஅதிகாரிகளுக்குப் பொதுத்தேர்வு நடத்துவதற்கானஅனைத்து விவரங்களையும் சேகரித்து, வினாத்தாள்தயாரிக்கும் பணியைத் தொடங்கியதுஅதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது.
5 மற்றும் 8-ம் வகுப்பின் பொதுத்தேர்வு நடத்துவதுகுறித்து மாநில அரசுகளேமுடிவெடுத்துக்கொள்ளலாம் என மத்திய அரசுஅறிவுறுத்தியிருக்கும் நிலையில், தமிழக அரசு இவ்வளவு அவசரம் காட்டுவது ஏன்?’எனக்கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இதுகுறித்து முன்னாள் துணைவேந்தரும்,கல்வியாளருமான வசந்தி தேவியிடம் பேசினோம். ``5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்குப்பொதுத்தேர்வு நடத்துவது மிகவும்பிற்போக்குத்தனமானது; இது ஏழைக்குழந்தைகளுக்கும், பொதுக்கல்விக்கும் எதிரானது.கல்வியில் மாற்றம் கொண்டு வருகிறேன் எனப்பொதுத்தேர்வை அறிமுகப்படுத்துவது, ஏழைகுழந்தைகளுக்குக் கிடைத்து வரும் கல்விக்குமுட்டுக்கட்டை போடுவது போன்றது. அனைத்துக்குழந்தைகளுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்றஇலவச கட்டாய கல்வி சட்டத்துக்கு இதுமுரணானதும் கூட.*
பொதுத்தேர்வு வசந்தி தேவிதொடக்கக்கல்வியில்பொதுத்தேர்வு என்று புனல்கொண்டு வடிகட்டநினைத்தால், ஏழை குழந்தைகள், குழந்தைத்தொழிலாளர்களாக மாறும் சூழல் உருவாகும்.இதனால், பெரும் நிறுவனங்களுக்குக் குறைந்தஊழியத்தில் தொழிலாளர்கள் கிடைப்பார்கள் என்றசூட்சமம் அடங்கி இருப்பதையும் கவனிக்கவேண்டும்.
பொருளாதார அளவில் மிகவும் பின்தங்கியவர்கள்,பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடிஇனத்தவர்களின் குழந்தைகள்புறக்கணிக்கப்படுவார்கள். இவர்களுக்கும்கல்விக்கும் சம்பந்தமில்லை என்ற நிலை உருவாகவாய்ப்புள்ளது. பெண் குழந்தைகள் பொதுத்தேர்வில்தேர்ச்சி பெறாதபோது, அவர்களைப் பள்ளிக்குஅனுப்பாமல் வீட்டிலேயே நிறுத்தும் சூழலும்ஏற்படும். குழந்தைத் திருமணத்துக்கானவாய்ப்புகள் அதிகரிக்கும்.
ஒருமுறை பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்பெறாத மாணவர்கள், அடுத்த பொதுத்தேர்வில்சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார்கள் என்று எந்தஆராய்ச்சியும் நிரூபிக்கவில்லை. தொடக்கக்கல்வியில் மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லைஎன்றால் அவர்களுக்குத் தகுந்த முறையில்கற்றுக்கொடுப்பதற்கு வசதியில்லை என்றுதான்அர்த்தம். பள்ளிகளில் தகுந்த வசதி ஏற்படுத்தாததுஅரசின் தோல்வியே’’ என்றார்.
கல்வியாளர் ராஜகோபாலன், ``தொடக்கக்கல்வியில்சராசரி மதிப்பெண் பெற்ற மாணவர்கள் உயர்கல்வித்துறையில் சிறப்பாகச் செயல்பட்டுஇருக்கிறார்கள். ஆரம்பக் கல்வி வகுப்புகளில்பொதுத்தேர்வு வைப்பது மழலைகளிடையே தேர்வுபயத்தையே உருவாக்கும். பொதுத்தேர்வில் தோல்விஅடைய வைப்பது அவர்களிடையே வன்முறைகுணத்தையே உருவாக்கும்" என்றார்.
பொதுத்தேர்வு பிரின்ஸ் கஜேந்திரபாபுமாநிலபொதுக்கல்வி மேடை அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, ``பொதுத்தேர்வுகளால் மாணவர்களின் திறமையைமேம்படுத்த முடியாது. கற்பித்தலைச் சிறப்பானமுறையில் மேற்கொள்வதன் மூலமேமாணவர்களைத் திறன் மிக்கவர்களாக மாற்றமுடியும். ஆரம்ப கல்விக்கான போதுமானகட்டமைப்பு வசதிகளும், ஆசிரியர்களும் இல்லாதசூழ்நிலையில், தரத்தை மேம்படுத்துவதற்காகப்பொதுத்தேர்வு என்பது ஏற்றுக்கொள்ளும் வகையில்இல்லை" என்றார்.
தமிழ்நாடு தனியார்ப் பள்ளிகளின் கூட்டமைப்பின்செயலாளர் இளங்கோவன், ``மாணவர்கள்பன்னிரண்டாம் வகுப்பு முடிப்பதற்குள் 5பொதுத்தேர்வுகளை எழுத வேண்டி இருக்கிறது. இதுமாணவர்கள் மன அமைதியைக் குலைக்கும். கடந்தஆண்டு 11-ம் வகுப்புக்குப் பொதுத்தேர்வு முறைஅறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆண்டுபதினொன்றாம் வகுப்பில் மாணவர்களின் சேர்க்கைகுறைந்திருக்கிறது. கல்வி முறையைத் தகுந்தமுறைக்கு மாற்றியமைக்காமல் பொதுத்தேர்வுஅறிமுகப்படுத்துவதில் நியாயமில்லை" என்றார்.
அரசின் இந்த முடிவுக்குக் கடும் எதிர்ப்பு நிலவியதைஅடுத்து, "இந்த ஆண்டு 5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படமாட்டாது" எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு,தற்காலிகமாக இந்தப் பொதுத் தேர்வைத்தள்ளிவைத்திருப்பதாகவே தெரிகிறது. ஒருவேளைமீண்டும் பா.ஜ.க தலைமையிலான அரசு ஆட்சிஅமைக்கும் பட்சத்தில், இந்த உத்தரவைஅமல்படுத்தக் கோரி நெருக்கடி கொடுக்கப்படலாம்என்பதையும் மறுப்பதற்கில்லை.
No comments:
Post a Comment