Thursday, May 9, 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிக்காத 1500 ஆசிரியர்களை பணிநீக்கம் செய்யும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

டெட் தேர்வு முடிக்காத ஆசிரியர்களை பணிநீக்கம் செய்யும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

தகுதித் தேர்வு முடிக்காத ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ய நடவடிக்கை
எடுக்கும்படி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.*

ஆசிரியர் தகுதி தேர்வு முடிக்காத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார்.*

இந்த உத்தரவை எதிர்த்து ராஜ்குமார் உள்ளிட்ட 100 ஆசிரியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.*

தகுதித் தேர்வு அறிமுகப்படுத்தி ஒன்பது ஆண்டுகளில் ஆண்டுக்கு இரண்டு முறை என 18 தேர்வுகள் நடத்தப்பட்டிருக்கவேண்டும். ஆனால் தமிழகத்தில் மூன்று முறைதான் நடத்தப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவித்துள்ளனர்.*

மற்ற மாநிலங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக தெளிவான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் மட்டும்தான் உரிய அரசாணை பிறப்பிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.*

தேசிய தகுதித் தேர்வை அடிப்படையாகக் கொண்டு தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், தமிழக ஆசிரியர்கள், தேசிய தகுதி தேர்வை எழுத முடியாது எனவும் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.*

தற்போதுகூட தேர்வு அறிவிப்புதான் வெளியாகி உள்ளதே தவிர எப்போது தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.*

தனி நீதிபதி முன்பு மனுதாரர்களாக இல்லாமல் பாதிக்கப்பட்டவர்கள் என்ற முறையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் மனுவில் கோரியிருந்தனர்.*

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், சுப்ரமணியம் பிரசாத் அமர்வு, மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதிப்பதாகக் கூறினர்.*

இந்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டு அடுத்தவாரம் விசாரிக்கப்படும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.*

No comments:

Post a Comment