'பள்ளிகளில், 16 ஆயிரத்து, 412 ஆசிரியர்கள் உபரியாக உள்ளதால், ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களை, புதிதாக நியமிக்கஇயலாது,'' என, பள்ளி கல்வித் துறை அமைச்சர்,செங்கோட்டையன் தெரிவித்தார்.சட்டசபையில்நடந்த விவாதம்: காங்., - பிரின்ஸ்: அரசுபள்ளிகளுக்கும், தனியார் பள்ளிகளுக்கும்வித்தியாசம் உள்ளது. தனியார் பள்ளிமாணவர்கள், காலை, 7:00 மணிக்கு சென்று, இரவு, 8:00 மணிக்கு, வீடு திரும்புகின்றனர். அங்கு,அடிமைகள் போல படிக்க வைக்கப்படுகின்றனர்.மாணவர்கள், கஷ்டத்தை அனுபவித்துவருகின்றனர். இந்த பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும்.அமைச்சர் செங்கோட்டையன்:இப்புகார் குறித்து, துறையில் ஆலோசித்து, உரியநடவடிக்கை எடுக்கப்படும்.பிரின்ஸ்: அரசுபள்ளிகளில், 'ஸ்மார்ட்' வகுப்புகள்துவங்கப்பட்டுள்ளன.
பல பள்ளிகளில் போதுமான உட்கட்டமைப்புவசதிகள் இல்லை. தனியார் பள்ளிகளில், அதிககட்டணம், நன்கொடைவசூலிக்கப்படுகிறது.செங்கோட்டையன்: தனியார்பள்ளிகளின், கட்டணங்களை வரைமுறைசெய்வதற்காக, குழு அமைக்கப்பட்டது. இந்தகுழுவின், கட்டண விபரங்கள், முன்னர், தலைமைஆசிரியர்களின் அறைகளில் மட்டுமேவைக்கப்பட்டு இருந்தது. தற்போது, பெற்றோர்கள்அறியும் வகையில், பள்ளி வளாகத்தில், கட்டணவிபரங்கள் குறித்த தகவல்கள்வெளியிடப்பட்டுள்ளன.பிரின்ஸ்: ஆசிரியர் தகுதிதேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, உடனடியாக,அரசு வேலைவாய்ப்பு வழங்கவேண்டும்.செங்கோட்டையன்: அரசு பள்ளிகளில், 16 ஆயிரத்து, 412 ஆசிரியர்கள் உபரியாகஉள்ளனர். எனவே, அதற்கு மேல், ஆசிரியர்களைநியமிக்க இயலாது.இவ்வாறு, விவாதம் நடந்தது.
No comments:
Post a Comment