Thursday, July 25, 2019

பிளஸ் 2 துணைத்தேர்வு மறு மதிப்பீடுக்கு அவகாசம்

பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வில் மறு மதிப்பீடுக்கு இன்றும் நாளையும் விண்ணப்பிக்கலாம்.ஜூனில் நடத்தப்பட்ட பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வில் பங்கேற்றவர்களில் விடைத்தாள் நகல் கோரி
விண்ணப்பித்தவர்களுக்கு நேற்று விடைத்தாள் நகல் வெளியிடப்பட்டது. தேர்வர்கள் scan.tndge.inஎன்ற இணையதளத்தில் பிறந்த தேதியை பயன்படுத்தி விடைத்தாள் நகலை பதிவிறக்கலாம்.விடைத்தாள் நகலில் மதிப்பெண் மாறுபாடு தெரிந்தால் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு scan.tndge.inஎன்ற இணையதளத்தில் அதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.இன்றும் நாளையும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியின் அலுவலகம் சென்று உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இந்த தகவலை அரசு தேர்வு தேர்வு துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment