Wednesday, July 24, 2019

புதிய கல்வி கொள்கை, பள்ளி கல்வி துறை வளாகத்தில் இன்று கருத்தறியும் கூட்டம்

புதிய கல்வி கொள்கை தொடர்பான கருத்தறியும் கூட்டம் பள்ளி கல்வி துறை வளாகத்தில் இன்று நடக்கிறது.மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த கல்வி கொள்கையின் அம்சங்களுக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு
எழுந்துள்ளது. கல்வி கொள்கை குறித்து கருத்துகளை தெரிவிக்க ஜூலை 31ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது.இதை தொடர்ந்து மத்திய அரசின் கல்வி கொள்கை குறித்து சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நேற்று முன்தினம் கருத்தறியும் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் இந்த கூட்டத்தை நடத்த சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.இந்நிலையில் கல்வி கொள்கை குறித்து தமிழக பள்ளி கல்வி துறையினரின் கருத்தறியும் கூட்டம் சென்னையில் பள்ளி கல்வி தலைமையகம் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் இன்று நடக்கிறது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் அரங்கில் கூட்டம் நடக்கிறது. இதில் கல்வி துறை அதிகாரிகள் மற்றும் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர்.

No comments:

Post a Comment