Monday, October 8, 2018

முதுநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் திடீர் சிக்கல்

அரசு பள்ளிகளில்பணி நியமனத்தின் போதேஊதிய உயர்வு கோரிக்கைஎழுந்துள்ளதால்,1,400 ஆசிரியர்களை நியமிப்பதில்சிக்கல் ஏற்பட்டுஉள்ளதுஅரசு பள்ளிகளில்காலமுறை ஊதியம்தொகுப்பூதியம்தினசரி
 ஊதியம்சிறப்பு தொகுப்பூதியம் எனபல ஊதிய முறைகளில்ஆசிரியர்கள்,பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தொகுப்பூதியங்களில் நியமிக்கப்படுவோர்பணிக்கு சேர்ந்த சிலஆண்டுகளில்சங்கமாக உருவாகிபணி நிரந்தரம் கோரி போராட்டம்நடத்தும் நிலை உள்ளதுஇந்நிலையில்தரம் உயர்த்தப்பட்ட அரசுமேல்நிலை பள்ளிகளில்பாடம் நடத்த, 11 பாடங்களுக்கு, 1,400ஆசிரியர்களை நியமிக்கபள்ளி கல்வித்துறை செயலகம் அனுமதிஅளித்துள்ளதுகாலியிடம் உள்ள பள்ளிகளில்பெற்றோர்ஆசிரியர் கழகம்வாயிலாகமாதம், 7,500 ரூபாய் தொகுப்பூதியத்தில்முதுநிலைஆசிரியர்களை தற்காலிகமாக நியமிக்கதலைமை ஆசிரியருக்கு அதிகாரம்வழங்கப்பட்டுள்ளது.இந்த பணி நியமனம் துவங்கியுள்ள நிலையில்பணிக்குசேர்ந்தவர்களும்ஆசிரியர் சங்க நிர்வாகிகளும்ஊதிய உயர்வுகோரிக்கையை எழுப்பியுள்ளனர்பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு மாதம், 7,700 ரூபாய் சம்பளம் தரும் போதுமுதுநிலை ஆசிரியர்களுக்குகுறைந்தபட்சம், 15 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என, 'வாட்ஸ் ஆப்'வழியாக பிரசாரம் துவக்கியுள்ளனர்.

இந்த நிலை நீடித்தால்புதிய ஆசிரியர்கள் பணிக்கு சேர்ந்த சில மாதங்களில்,ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடத்தவாய்ப்புள்ளதாகபள்ளி கல்வி அதிகாரிகளுக்கு தகவல்கள் வந்துள்ளன.எனவேதற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது

No comments:

Post a Comment