பூ சூடவும், கொலுசுபோடவும், தடை!
தமிழகத்தில் உள்ள அரசுமற்றும் தனியார்பள்ளிகளில்,அனைத்துமாணவர்களும்,மாணவியரும், பள்ளிநாட்களில் சீருடை மட்டுமே,அணிந்து செல்லவேண்டும். சிலபள்ளிகளில்,காலணிகளும், பலபள்ளிகளில், 'ஷூ'அணிந்தும்செல்லவேண்டும் என்பதுவிதி.
அதேபோல்,நர்சரி பள்ளிகுழந்தைகள்,தங்கம்,வெள்ளி ஆபரணங்கள்அணிந்து செல்லவும்,தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சில அரசுபள்ளிகளில், மாணவியர்தலையில் பூ வைத்தும்,கொலுசு அணிந்தும்வருகின்றனர். சிலமாணவர்கள், கைகளில், பலவண்ண பட்டை மற்றும்கயிறு அணிந்து வருகின்றனர்.இதனால்,மாணவ - மாணவியர்இடையே பிரச்னைஏற்படுவதாக, புகார்கள்எழுந்துள்ளன.இதையடுத்து, அனைத்துஅரசு பள்ளிகளிலும்,மாணவியர் பூ சூடி வர, தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பள்ளி கல்விமுதன்மை அதிகாரிகள்வழியாக, தலைமைஆசிரியர்கள் அறிவுறுத்தபட்டுஉள்ளனர்.அதேபோல்,மாணவ,மாணவியர், 'ஜீன்ஸ்,டைட்ஸ்' உள்ளிட்ட ஆடைகள்அணியவும்,
தேவையற்றஅணிகலன்கள் அணிவதற்கும், மருதாணிவைப்பதற்கும்கட்டுப்பாடுகள்விதிக்கப்பட்டு உள்ளன.தனியார் பள்ளிகளில்,ஏற்கனவே இந்த கட்டுப்பாடுகள் அமலில் உள்ளனஎன்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment