Wednesday, November 28, 2018

ஜாக்டோ- ஜியோ போராட்டத்தை ஒத்திவைக்க ஸ்டாலின் கோரிக்கை

Image result for dmk stalin
'கஜாபுயல் நிவாரண பணிகளுக்காக டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள காலவரையறையற்ற வேலை நிறுத்தப்   போராட்டத்தை ஜாக்டோ ஜியோ அமைப்பு ஒத்திவைக்க வேண்டும்   எனதிமுக தலைவர்மு..ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக மு..ஸ்டாலின் இன்று (புதன்கிழமைவெளியிட்டஅறிக்கையில்,"புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டுமீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்துவது  உள்ளிட்ட பல்வேறு நியாயமான நடைமுறைக்கேற்ற கோரிக்கைகளைவலியுறுத்தி ஜாக்டோஜியோ அமைப்பு சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தியும்அப்போராட்டங்களை அதிமுக அரசு காதில்போட்டுக் கொள்ளவோ கண்டுகொள்ளவோ செய்யாமல் முற்றிலும்அலட்சியப்படுத்தியதின் விளைவாகவருகின்ற டிசம்பர் 4 ஆம்தேதியிலிருந்து காலவரையறையற்றப் போராட்டத்தை நடத்தப் போவதாகஜாக்டோஜியோ அமைப்பினர் அறிவித்திருக்கிறார்கள்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உரிமையின் அடிப்படையில்வழக்கமாக வாங்கி வரும்  சம்பளத்தையே கேலி பேசும் முதல்வர்தலைமையில் நடைபெறும் அதிமுக ஆட்சியில்முன்பு எப்போதும் இல்லாதவகையில் இதுபோன்ற தொடர் போராட்டங்களை நடத்த வேண்டிய கட்டாயநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் என்பதை நினைத்துப் பார்க்கும் போதுவேதனையாக இருக்கிறது.
  
பெண் அரசு ஊழியர்கள் என்றுகூடப்  பார்க்காமல் கைது செய்வது,முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் பயணிக்கும்பேருந்துகளுக்குள் புகுந்து அடாவடியாக திடீர் கைது செய்வதுஅறவழிபோராட்டங்களைக்கூடப் பொறுத்துக் கொள்ள முடியாமல்  முள்வேலிஅமைத்து தடுப்பது போன்ற அராஜகச் செயல்களில் அதிமுக அரசு ஈடுபட்டுவருகிறது.

நிர்வாகத்  திறமை இல்லாத ஆட்சியில் அரசு ஊழியர்கள்சத்துணவுஊழியர்கள்ஆசிரியர்கள் என்று மட்டுமல்லஅனைத்துத்  தரப்பு மக்களுமேதங்கள் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டதால் தினமும் போராடும்சூழ்நிலை உருவாகியிருக்கிறது.

ஆகவே ஜாக்டோஜியோ அமைப்பினரின் அறவழிப் போராட்டம் முழுக்கமுழுக்க நியாயமானது என்றாலும், 'கஜாபுயல் பாதிப்பு ஏற்பட்டுள்ள இந்தநேரத்தில்பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான பணிகளில் ஈடுபடவேண்டியதிருப்பதால்வருகிற டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெறுவதாகஅறிவிக்கப்பட்டுள்ள காலவரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தைஒத்தி வைக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அதிமுக அரசு யாருடையை கோரிக்கைகளையும் அழைத்துப் பேசிநிறைவேற்றும் அரசு அல்லபோராடினாலும் தமிழக அரசு திருந்தப்போவதில்லைஅடிப்படையிலேயே தமிழக அரசு ஊழியர்கள் மற்றும்ஆசிரியர்களுக்கு எதிரான அரசு.

ஆகவே எத்தனை முறை போராடினாலும் எந்தவகைப் போராட்டமானாலும்எதிர்பார்க்கும் பலன்கள் கிடைத்திடப் போவதில்லைமாறாக மனித சக்திவிரயம்தான் ஏற்படும்இதுபோன்ற பிரச்சினைகள் அனைத்திற்கும் ஆட்சிமாற்றம் ஒன்றே ஜனநாயக வழி என்பதை மனதில் நிறுத்திஅரசு ஊழியர்கள்மற்றும் ஆசிரியர்கள்சூழ்நிலைகளின் பின்னணியில் நான் விடுக்கும் இந்தஅன்பான வேண்டுகோளை கனிவுடன் ஆராய்ந்து பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அதே நேரத்தில்,  திமுக  ஆட்சி அமைந்திடும் நல்வாய்ப்பு செயலாக்கம்பெற்றதும்இதுமாதிரி எவ்வித போராட்டங்களும் நடத்தாமலேயேஜாக்டோஜியோ அமைப்பினரின் நியாயமான கோரிக்கைகள் குறித்துக்கலந்து பேசி நிறைவேற்றித் தரப்படும் என்பதையும் திமுக சார்பில்உறுதியளிக்கிறேன்என மு..ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment