தொலைதூர கல்வியில் இனி வேளாண்மைக்குஇடமில்லை..!
வேளாண் பட்டப்படிப்பில் தொலைதூரக் கல்வியினை தடைசெய்வதாக வேளாண்மைப் பல்கலைக் கழக மானியக் குழுஅறிவித்துள்ளது.
இந்த முடிவானது உயர் கல்வித்துறையின் ஒழுங்குமுறை ஆணையத்தால் நடைபெற்றகூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது.
இந்த முடிவானது உயர் கல்வித்துறையின் ஒழுங்குமுறை ஆணையத்தால் நடைபெற்றகூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது.
வேளாண் பட்டப்படிப்பு கல்வி என்பது இயற்கைதொழில்நுட்பம், பரிசோதனை முயற்சிகள், ஆய்வகச்சோதனைகள் உள்ளிட்டவற்றை ஒன்றடைக்கியகல்வியாகும். இதில், தொலைதூர கல்வி முறையில்பாடமாக கற்பிக்கும் போது போதிய திறன்கள்மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுவதில்லை.
இதுதொடர்பாக மத்திய வேளாண்துறை அமைச்சகம்,உயர்கல்வி ஆணையத்துக்கு விடுத்துள்ளகோரிக்கையினை ஏற்று தொலைதூர பல்கலைக்கழகங்களிலும், திறந்தவெளி பல்கலைக் கழகங்களிலும்வேளாண் பட்டப்படிப்பை கற்றுக் கொடுக்க தடைவிதிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.
மேலும், திறந்தவெளி மற்றும் தொலைதூர பல்கலைக்கழகங்களில், பல்கலைக்கழக மானியக்குழுவின்ஒழுங்குமுறை ஆணையம்-2017ன்படி, தொழிற்பயிற்சிசார்ந்த கல்வியான மருத்துவம், பொறியியல், கட்டிடவியல்,செவிலியர், பல் மருத்துவம், மருந்து கையாளுதல்,பிஸியோதெரபி போன்ற கல்விகளைக் கற்றுத்தரமுடியாது.
அதன்படி, ஏற்கனவே கல்லூரிகளில் வேளாண்பட்டப்படிப்பை பயின்று வரும் மாணவர்களுக்கு எவ்விதபாதிப்பும் ஏற்படாத வகையில் இந்திய வேளாண்ஆராய்ச்சி குழு (ஐசிஏஆர்) சார்பில், தொலைதூர மற்றும்திறந்தவெளி பல்கலைக் கழகங்களில் வரும் 2019ஆம்ஆண்டு முதல் புதிய சேர்க்கையை நிறுத்தி வைக்கஉத்தரவிடப்பட்டுள்ளது
No comments:
Post a Comment