ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பாட
நோட்டு புத்தகம் தற்போது வரை 70 சதவீதம் வந்துள்ளது எனவும், மே மாத இறுதிக்குள் அனைத்தும் பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் என ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார். ஈரோடு மாவட்டத்தில் பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 3ம் தேதி திறக்கப்பட உள்ளன. இதில் பள்ளிகள் திறக்கப்படும்போது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாட புத்தகம், நோட்டு, சீருடைகள் வழங்கப்பட உள்ளது. இதற்காக பாட நோட்டு புத்தகங்கள் ஈரோடு ரயில்வே காலனி மாநகராட்சி மேல்நிலை பள்ளிக்கு வரத்துவங்கியுள்ளன.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி கூறுகையில், ''மாவட்டத்தில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு பாட புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் வழங்கப்பட உள்ளன.
இந்த ஆண்டு 7, 8, 10, 12ம் வகுப்பு பாட பிரிவுகளுக்கு புதிய பாட்டத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 9ம் வகுப்பு தமிழ், ஆங்கிலம் பாடத்துக்கு மூன்று தொகுப்புகளுக்கு பதிலாக ஒரே தொகுப்பு பாட புத்தகமாக வந்துள்ளது. புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் தற்போது வரை 70 சதவீதம் வந்துள்ளது. அனைத்து பாட புத்தகம் மற்றும் நோட்டுகள் வந்த உடன் மாவட்டத்தில் உள்ள ஈரோடு, கோபி, சத்தி, பெருந்துறை, பவானி கல்வி மாவட்டங்களுக்கு மே மாத இறுதிக்குள் அதாவது பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக நோட்டு புத்தகங்கள் அனைத்தும் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்,'' என்றார்.
நோட்டு புத்தகம் தற்போது வரை 70 சதவீதம் வந்துள்ளது எனவும், மே மாத இறுதிக்குள் அனைத்தும் பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் என ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார். ஈரோடு மாவட்டத்தில் பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 3ம் தேதி திறக்கப்பட உள்ளன. இதில் பள்ளிகள் திறக்கப்படும்போது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாட புத்தகம், நோட்டு, சீருடைகள் வழங்கப்பட உள்ளது. இதற்காக பாட நோட்டு புத்தகங்கள் ஈரோடு ரயில்வே காலனி மாநகராட்சி மேல்நிலை பள்ளிக்கு வரத்துவங்கியுள்ளன.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி கூறுகையில், ''மாவட்டத்தில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு பாட புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் வழங்கப்பட உள்ளன.
இந்த ஆண்டு 7, 8, 10, 12ம் வகுப்பு பாட பிரிவுகளுக்கு புதிய பாட்டத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 9ம் வகுப்பு தமிழ், ஆங்கிலம் பாடத்துக்கு மூன்று தொகுப்புகளுக்கு பதிலாக ஒரே தொகுப்பு பாட புத்தகமாக வந்துள்ளது. புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் தற்போது வரை 70 சதவீதம் வந்துள்ளது. அனைத்து பாட புத்தகம் மற்றும் நோட்டுகள் வந்த உடன் மாவட்டத்தில் உள்ள ஈரோடு, கோபி, சத்தி, பெருந்துறை, பவானி கல்வி மாவட்டங்களுக்கு மே மாத இறுதிக்குள் அதாவது பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக நோட்டு புத்தகங்கள் அனைத்தும் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்,'' என்றார்.
No comments:
Post a Comment