டெட் தேர்வில் தேர்ச்சியடையாத ஆசிரியர்களுக்கு, வழங்கப்படும் சிறப்பு பயிற்சியில் திறனற்ற
பயிற்றுனர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக, ஆசிரியர்கள் கூறி குமுறுகின்றனர்.ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சியடையாத, ஆயிரத்து 500 ஆசிரியர்களுக்கு, மாநில கல்வியில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், 10 நாட்கள் சிறப்புப் பயிற்சி வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இந்த பயிற்சிக்கு பெயர் பதிவு செய்து, தகுதி தேர்வுக்கு தயாராகுமாறு, ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும், 43 ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.நேற்று, முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் பத்துக்கும் குறைவான ஆசிரியர்கள் மட்டுமே, சிறப்பு பயிற்சிக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், தங்களுக்கு பயிற்சி அளிக்க, தகுதியான பயிற்றுனர்களை நியமிக்கவில்லை என ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.இதுதொடர்பாக ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:ஆசிரியர்களுக்கான டெட் பயிற்சி வகுப்புகள், அவசரகதியில் துவங்கப்பட்டுள்ளன. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், நடத்தப்படும் பயிற்சிக்கு, கருத்தாளர்களே பயிற்றுனர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.டெட் தேர்வுக்குரிய பாடத்திட்ட புத்தகங்கள் தவிர, தமிழ்நாடு பாடத்திட்ட புத்தகங்கள், உளவியல் என மொத்தம், 700 யூனிட்டுகள் உள்ளது. இந்த பாடத்திட்டங்களை கற்பிக்க, திறன்மிக்க பயிற்றுனர்கள் நியமிக்கப்படவில்லை. பெயரளவுக்கு பயிற்சி நடத்தப்படுகிறது.
திறமையான பயிற்றுனர்களை நியமித்தால் மட்டுமே, பயிற்சி உதவிகரமாக இருக்கும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.பயிற்சிக்கு பெயர் பதிவு செய்து, தகுதி தேர்வுக்கு தயாராகுமாறு, ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும், 43 ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. தங்களுக்கு பயிற்சி அளிக்க, தகுதியான பயிற்றுனர்களை நியமிக்கவில்லை என ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பயிற்றுனர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக, ஆசிரியர்கள் கூறி குமுறுகின்றனர்.ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சியடையாத, ஆயிரத்து 500 ஆசிரியர்களுக்கு, மாநில கல்வியில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், 10 நாட்கள் சிறப்புப் பயிற்சி வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இந்த பயிற்சிக்கு பெயர் பதிவு செய்து, தகுதி தேர்வுக்கு தயாராகுமாறு, ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும், 43 ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.நேற்று, முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் பத்துக்கும் குறைவான ஆசிரியர்கள் மட்டுமே, சிறப்பு பயிற்சிக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், தங்களுக்கு பயிற்சி அளிக்க, தகுதியான பயிற்றுனர்களை நியமிக்கவில்லை என ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.இதுதொடர்பாக ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:ஆசிரியர்களுக்கான டெட் பயிற்சி வகுப்புகள், அவசரகதியில் துவங்கப்பட்டுள்ளன. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், நடத்தப்படும் பயிற்சிக்கு, கருத்தாளர்களே பயிற்றுனர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.டெட் தேர்வுக்குரிய பாடத்திட்ட புத்தகங்கள் தவிர, தமிழ்நாடு பாடத்திட்ட புத்தகங்கள், உளவியல் என மொத்தம், 700 யூனிட்டுகள் உள்ளது. இந்த பாடத்திட்டங்களை கற்பிக்க, திறன்மிக்க பயிற்றுனர்கள் நியமிக்கப்படவில்லை. பெயரளவுக்கு பயிற்சி நடத்தப்படுகிறது.
திறமையான பயிற்றுனர்களை நியமித்தால் மட்டுமே, பயிற்சி உதவிகரமாக இருக்கும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.பயிற்சிக்கு பெயர் பதிவு செய்து, தகுதி தேர்வுக்கு தயாராகுமாறு, ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும், 43 ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. தங்களுக்கு பயிற்சி அளிக்க, தகுதியான பயிற்றுனர்களை நியமிக்கவில்லை என ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
No comments:
Post a Comment