சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்
அப்போது பேசிய அவர், "பாடத் திட்டத்தைப் பொறுத்தவரை 11 மற்றும் 12ஆம் வகுப்பு தமிழ் ஆங்கிலம் உள்ளிட்ட ஆறு பாடத்திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை ஆறு பாடத்திட்டங்களும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும். குறிப்பாக மொழிப் பாடத்தில் மாற்றமில்லை.
தேவைப்பட்டால் தமிழ், ஆங்கிலம் தவிர மற்ற நான்கு பாடங்களில் ஆப்ஷன் முறையில் மாணவர்கள் விருப்பப்பட்ட பாடங்களை தேர்ந்தெடுப்பது தொடர்பாக முதல்வரிடம் கோப்பு அனுப்பப்பட்டுள்ளது.
தண்ணீர் பற்றாக்குறை காரணமாக தமிழகத்தில் எந்தப் பள்ளியும் மூடப்படவில்லை. அனைத்துப் பள்ளிகளிலும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பாட புத்தகங்கள் முழுமையாக சென்றடையாத பள்ளிகளில் இன்று அல்லது நாளை மாலைக்குள் புத்தகங்கள் விநியோகிக்கப்படும்" என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம்தெரிவித்தார்.
No comments:
Post a Comment