போதிய பருவமழை இல்லாத காரணத்தால், சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
சென்னையில் பள்ளிகளில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பள்ளி நிர்வாகம் மாணவர்களே வீட்டிலிருந்து குடிநீரை எடுத்துவர வேண்டும் என பெற்றோருக்கு குறுஞ்செய்தி அனுப்பி வருகிறது.
இதற்கு பெற்றோர் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் சில பள்ளிகளில் போதுமான அளவு தண்ணீர் இல்லாத காரணத்தால் விடுமுறை விடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்தநிலையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது,
சென்னையில் உள்ள பள்ளிகளில் குடிநீர்ப் பிரச்னை இருந்தால் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் சார்பில் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கலாம்.
பள்ளிகளுக்குத் தேவையான குடிநீர் வாங்க பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலம் நிதி ஏற்பாடு செய்யப்படும். இதன்மூலம் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் குடிக்க, கழிவறைகளில் பயன்படுத்த தண்ணீர் கிடைக்க வழி செய்யப்படும்.
பள்ளிகளில் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ஜூன் 17 முதல் ஆய்வுப்பணிகள் நடைபெறும் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment