Sunday, July 28, 2019

பிரைவேட் ஸ்கூலில் இருந்து கவர்மெண்ட் ஸ்கூல்களுக்கு மாறிய 1 லட்சம் மாணவர்கள் !அசத்திய அரசுப் பள்ளிகள் !!

அரசுப் பள்ளிகளில்மாணவர்களுக்குப்போதியவசதிகள் இல்லைஎனவும்கல்வித் தரம்மந்தமாக இருப்பதாகவும்கூறி பெரும்பாலானபெற்றோர்கள் தங்களதுகுழந்தைகளைத் தனியார்பள்ளிகளுக்குக் கல்விபயில அனுப்புகின்றனர்.

அரசுத் துறை அதிகாரிகள்கூடத் தங்களதுபிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க்கத்தயங்குகின்றனர்தனியார்பள்ளிகளில் கல்விக்கட்டணம் அதிகமாகஇருந்தாலும் கல்வித்தரத்தைக் கருத்தில்கொண்டு தனியார்பள்ளிகளை நோக்கியேபெற்றோர்கள்படையெடுக்கின்றனர்.இந்தப் பழக்கம் தற்போதுமாறியுள்ளது. 2019-20ஆம்ஆண்டில் மட்டும் 2 முதல் 5வரையிலானவகுப்புகளுக்கு ஒரு லட்சம்மாணவர்கள் தனியார்பள்ளிகளிலிருந்து அரசுப்பள்ளிகளுக்கு இடம்மாறியுள்ளனர்.

தனியார் பள்ளிகளில்வசூலிக்கப்படும் அளவுக்குஅதிகமான கட்டணங்கள்ஒரு புறம்பயமுறுத்தினாலும்,தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் தற்போதுஉட்கட்டமைப்பு வசதிகள்அதிகரிக்கப்பட்டுள்ளதும்,ஆசிரியர்களின் உழைப்பும்மாணவர்கள் இடம்மாறுவதாகத் தலைமைஆசிரியர்களும் கல்வித்துறை அதிகாரிகளும்கூறுகின்றனர்.2018-19ஆம்ஆண்டில் மொத்தம் 3.93லட்சம்பேர் ஒன்றாம் வகுப்புபடித்த நிலையில் இந்தஆண்டில் இரண்டாம் வகுப்புமாணவர்களின்எண்ணிக்கை 4.16 லட்சமாகஉயர்ந்துள்ளதுதனியார்பள்ளிகளிலிருந்து23,032பேர் இரண்டாம் வகுப்பில்இணைந்துள்ளனர்.மூன்றாம் வகுப்பில் 30,744மாணவர்களும்நான்காம்வகுப்பில் 27,868மாணவர்களும்ஐந்தாம்வகுப்பில் 23,859மாணவர்களும் புதிதாகஇணைந்துள்ளனர்.

இரண்டு முதல் ஐந்தாம்வகுப்பு வரையில் உள்ளமாணவர்களின்எண்ணிக்கை இந்தஆண்டில் ஒரு லட்சம்வரையில்உயர்ந்துள்ளதாகக் கல்வித்துறை அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.மாறாக, 2018-19ஆம் ஆண்டில் சுமார் 2லட்சம் மாணவர்கள் அரசுப்பள்ளிகளிலிருந்து தனியார்பள்ளிகளுக்கு இடம்மாறியிருந்தனர்.

சென்ற ஆண்டுடன்ஒப்பிடும்போது இந்தஆண்டில் ஒன்றாம்வகுப்பில் இணைந்தமாணவர்களின்எண்ணிக்கை கிட்டத்தட்டசமமாகவே இருக்கும்நிலையில், 2 முதல் 5வரையிலான வகுப்புகளில்புதிதாக இணைந்தமாணவர்களின்எண்ணிக்கைஅதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment