அரசு மருத்துவக்கல்லுாரிகளில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, தனி ஒதுக்கீடு வழங்க முடியுமா' என, தமிழக அரசிடம், சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.மருத்துவ படிப்பில், தகுதியான
மாணவர்கள் தான் சேர்க்கப்படுகின்றனரா என்பதை பார்க்க வேண்டிய கடமை, அரசுக்கு உள்ளதாகவும் உயர் நீதிமன்றம்தெரிவித்துள்ளது.
கவுன்சிலிங்'
தமிழக மருத்துவக் கல்லுாரிகளில், வெளிநாட்டில் வசிக்கும் இந்தியருக்கான ஒதுக்கீட்டில், 207 இடங்கள் காலியாக உள்ளன.'இந்த இடங்களை, நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் நிரப்ப, தகுதி அடிப்படையில், முறையான கவுன்சிலிங் நடத்த, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்' எனக்கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனு, தள்ளுபடி செய்யப்பட்டது.இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள், கிருபாகரன், வேல்முருகன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. மருத்துவ கவுன்சில் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வி.பி.ராமன், ''கடைசி இரண்டு நாட்களில் தான், காலியிடங்கள் ஏற்படும். தகுதி அடிப்படையை பின்பற்றும்படி, மருத்துவக் கல்லுாரிகளுக்கு அறிவுறுத்தி, மாணவர்கள் பட்டியல் அனுப்பப்படும்,'' என்றார்.அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல், அரவிந்த் பாண்டியன், ''கவுன்சிலிங் நடத்தப் பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வில், உச்ச நீதிமன்றத்தின் வழிமுறைகள் பின்பற்றப் பட்டுள்ளன,'' என்றார்.காலியிடங்கள்மனுதாரர் தரப்பில், வழக்கறிஞர் வேல்முருகன் வாதாடியதாவது:
இரண்டாவது, மூன்றாவது கட்ட கவுன்சிலிங் நடத்தப் பட்டதற்கான ஆதாரங்களை, முதலில் அரசு சமர்ப்பிக்கட்டும்; இந்த இரண்டு கவுன்சிலிங்கையும் நடத்தி இருந்தால், காலியிடங்கள் ஏற்பட்டிருக்காது. ஆனால், இரண்டு கவுன்சிலிங்கையும் நடத்தவில்லை.வெளிநாட்டில் வசிக்கும் இந்தியருக்கான, ௨௦௦க்கும் மேற்பட்ட இடங்கள், கவுன்சிலிங் துவங்குவதற்கு முன், ஒரு சீட், 40முதல், 50லட்சம் ரூபாய் வரை, விற்பனையாகி உள்ளது.இதில், ௧௦௦ கோடி ரூபாய் வரை மோசடி நடந்துள்ளது. தனியார்கல்லுாரிகள், வணிகம் செய்கின்றன.இவ்வாறு அவர் வாதிட்டார். இதையடுத்து, நீதிபதிகள் கூறியதாவது:தனியார் கல்லுாரிகள், வணிகம் மட்டும் அல்லாமல், சேவையும் செய்கின்றன. பள்ளி படிப்பு என்றால், தனியாரை நாடுபவர்கள், மருத்துவ படிப்பு என்றால், அரசு மருத்துவக் கல்லுாரிகளை நாடுகின்றனர்.அரசு பள்ளி மாணவர்களுக்கு, அரசு மருத்துவக் கல்லுாரிகளில், தனி ஒதுக்கீடு வழங்க முடியுமா என்பதை பார்க்க வேண்டும்.அப்போது, அரசு பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும். நன்றாக படிக்கும் தகுதியான மாணவர்களும், அரசுப் பள்ளிகளில் சேர்வர். இல்லையென்றால், அரசுப் பள்ளிகளை காப்பாற்ற முடியாது. தமிழகத்தில், உயர் கல்வி சிறந்து விளங்குகிறது. உயர் கல்வி மையமாக, தமிழகம்உள்ளது.
அரசின் கடமைதனியார் மருத்துவக் கல்லுாரிகளுக்கு, மாணவர்கள் பட்டியலை அனுப்பும் தேர்வுத்துறை, தகுதி அடிப்படையில் நியமிக்கப் பட்டுள்ளனரா என்பதை பார்க்க வேண்டாமா; தகுதியான மாணவர்கள் சேர்க்கப் பட்டுள்ளனர் என்பதை பார்க்க வேண்டிய கடமை, அரசுக்கு உள்ளது.இவ்வாறு, நீதிபதிகள் கூறினர்.பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:இவ்வழக்கில் சேர்க்கப்பட்ட, ௧௦ தனியார் மருத்துவக் கல்லுாரிகளும், மாணவர்கள் பட்டியல் மற்றும் பெற்ற மதிப்பெண்கள், பின்பற்றிய தேர்வு நடைமுறை விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும். வெளிநாட்டில் வசிக்கும் இந்தியருக்கான இடங்களை நிரப்ப, தனி அட்ட வணையை அளிக்காததால், இந்தப் பிரச்னை எழுந்ததாக, மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. இதற்கான விளக்கத்தை, மருத்துவ கவுன்சில் அளிக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.விசாரணையை, அக்., ௧௫க்கு தள்ளி வைத்தனர்.
மாணவர்கள் தான் சேர்க்கப்படுகின்றனரா என்பதை பார்க்க வேண்டிய கடமை, அரசுக்கு உள்ளதாகவும் உயர் நீதிமன்றம்தெரிவித்துள்ளது.
கவுன்சிலிங்'
தமிழக மருத்துவக் கல்லுாரிகளில், வெளிநாட்டில் வசிக்கும் இந்தியருக்கான ஒதுக்கீட்டில், 207 இடங்கள் காலியாக உள்ளன.'இந்த இடங்களை, நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் நிரப்ப, தகுதி அடிப்படையில், முறையான கவுன்சிலிங் நடத்த, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்' எனக்கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனு, தள்ளுபடி செய்யப்பட்டது.இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள், கிருபாகரன், வேல்முருகன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. மருத்துவ கவுன்சில் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வி.பி.ராமன், ''கடைசி இரண்டு நாட்களில் தான், காலியிடங்கள் ஏற்படும். தகுதி அடிப்படையை பின்பற்றும்படி, மருத்துவக் கல்லுாரிகளுக்கு அறிவுறுத்தி, மாணவர்கள் பட்டியல் அனுப்பப்படும்,'' என்றார்.அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல், அரவிந்த் பாண்டியன், ''கவுன்சிலிங் நடத்தப் பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வில், உச்ச நீதிமன்றத்தின் வழிமுறைகள் பின்பற்றப் பட்டுள்ளன,'' என்றார்.காலியிடங்கள்மனுதாரர் தரப்பில், வழக்கறிஞர் வேல்முருகன் வாதாடியதாவது:
இரண்டாவது, மூன்றாவது கட்ட கவுன்சிலிங் நடத்தப் பட்டதற்கான ஆதாரங்களை, முதலில் அரசு சமர்ப்பிக்கட்டும்; இந்த இரண்டு கவுன்சிலிங்கையும் நடத்தி இருந்தால், காலியிடங்கள் ஏற்பட்டிருக்காது. ஆனால், இரண்டு கவுன்சிலிங்கையும் நடத்தவில்லை.வெளிநாட்டில் வசிக்கும் இந்தியருக்கான, ௨௦௦க்கும் மேற்பட்ட இடங்கள், கவுன்சிலிங் துவங்குவதற்கு முன், ஒரு சீட், 40முதல், 50லட்சம் ரூபாய் வரை, விற்பனையாகி உள்ளது.இதில், ௧௦௦ கோடி ரூபாய் வரை மோசடி நடந்துள்ளது. தனியார்கல்லுாரிகள், வணிகம் செய்கின்றன.இவ்வாறு அவர் வாதிட்டார். இதையடுத்து, நீதிபதிகள் கூறியதாவது:தனியார் கல்லுாரிகள், வணிகம் மட்டும் அல்லாமல், சேவையும் செய்கின்றன. பள்ளி படிப்பு என்றால், தனியாரை நாடுபவர்கள், மருத்துவ படிப்பு என்றால், அரசு மருத்துவக் கல்லுாரிகளை நாடுகின்றனர்.அரசு பள்ளி மாணவர்களுக்கு, அரசு மருத்துவக் கல்லுாரிகளில், தனி ஒதுக்கீடு வழங்க முடியுமா என்பதை பார்க்க வேண்டும்.அப்போது, அரசு பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும். நன்றாக படிக்கும் தகுதியான மாணவர்களும், அரசுப் பள்ளிகளில் சேர்வர். இல்லையென்றால், அரசுப் பள்ளிகளை காப்பாற்ற முடியாது. தமிழகத்தில், உயர் கல்வி சிறந்து விளங்குகிறது. உயர் கல்வி மையமாக, தமிழகம்உள்ளது.
அரசின் கடமைதனியார் மருத்துவக் கல்லுாரிகளுக்கு, மாணவர்கள் பட்டியலை அனுப்பும் தேர்வுத்துறை, தகுதி அடிப்படையில் நியமிக்கப் பட்டுள்ளனரா என்பதை பார்க்க வேண்டாமா; தகுதியான மாணவர்கள் சேர்க்கப் பட்டுள்ளனர் என்பதை பார்க்க வேண்டிய கடமை, அரசுக்கு உள்ளது.இவ்வாறு, நீதிபதிகள் கூறினர்.பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:இவ்வழக்கில் சேர்க்கப்பட்ட, ௧௦ தனியார் மருத்துவக் கல்லுாரிகளும், மாணவர்கள் பட்டியல் மற்றும் பெற்ற மதிப்பெண்கள், பின்பற்றிய தேர்வு நடைமுறை விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும். வெளிநாட்டில் வசிக்கும் இந்தியருக்கான இடங்களை நிரப்ப, தனி அட்ட வணையை அளிக்காததால், இந்தப் பிரச்னை எழுந்ததாக, மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. இதற்கான விளக்கத்தை, மருத்துவ கவுன்சில் அளிக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.விசாரணையை, அக்., ௧௫க்கு தள்ளி வைத்தனர்.
No comments:
Post a Comment