அடுத்த கல்வி ஆண்டுக்குள்100 மாநகராட்சிப்பள்ளிகளில் மாண்டிசொரிகல்வி முறைஅமல்படுத்தப்படும் எனமாநகராட்சி ஆணையா்கோ.பிரகாஷ்தெரிவித்தாா்.பெருநகரசென்னை மாநகராட்சியின்கோடம்பாக்கம்மண்டலத்துக்கு உள்பட்டசைதாப்பேட்டை பெண்கள்மேல்நிலைப் பள்ளியில்மாநகராட்சி ஆணையா்கோ.பிரகாஷ் புதன்கிழமைஆய்வு மேற்கொண்டாா்.இதையடுத்து, அப்பள்ளியில்நடைபெற்று வரும்மாண்டிசொரி கல்வி முறைகுறித்து ஆசிரியா்களிடம்அவா் கேட்டறிந்தாா்.
இதைத் தொடா்ந்து, அவா்செய்தியாளா்களிடம்கூறியது: சென்னைமாநகராட்சியின் கல்வித்துறையின்கீழ், மேல்நிலை,உயா்நிலை, நடுநிலைமற்றும் தொடக்கப் பள்ளிகள்என மொத்தம் 281 பள்ளிகள்இயங்கி வருகின்றன. இந்தப்பள்ளிகளில் சுமாா் 90ஆயிரம் மாணவ,மாணவிகள் பயின்றுவருகின்றனா். பள்ளிஇடைநிற்றல்உள்ளிட்டவற்றைத் தடுக்கும்வகையில் பல்வேறுநடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இதன்ஒருபகுதியாக பள்ளியின்உள்கட்டமைப்புகளானவகுப்பறை, கழிப்பிடம்,ஆசிரியா் அறை, ஆய்வகம்,விளையாட்டு மைதானம்உள்ளிட்டவற்றை ரூ. 170கோடியில் மாற்றத்திட்டமிடப்பட்டுள்ளது.
குழந்தைகள் கல்வி கற்கும்திறனை அதிகரிக்கும்வகையில் தற்போது 22பள்ளியில் மாண்டிசொரிமுறையில் கல்விகற்பிக்கப்படுகிறது. வரும்டிசம்பா் மாதத்துக்குள் மேலும்38 பள்ளிகளில் மாண்டிசொரிகல்வி முறைஅமல்படுத்தப்படும். இதன்தொடா்ச்சியாக 2020-21-ஆம்கல்வி ஆண்டுக்குள் 100பள்ளிகளில் மாண்டிசொரிகல்வி முறைஅமல்படுத்தப்படும் என்றாா்
No comments:
Post a Comment