Thursday, October 31, 2019

மூன்று பாடங்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்படும்: பள்ளிக் கல்வித்துறை

தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம்வகுப்புகளுக்குபொதுத்தேர்வு நடத்தப்படும்என கடந்த செப்டம்பர் மாதம்
அரசு அறிவித்ததுஇதற்காகஅரசாணையும் தமிழக அரசுவெளியிட்டதுஇந்நிலையில்5, 8ம் வகுப்புமாணவர்களுக்கு 60மதிப்பெண்களுக்கு மட்டுமேபொதுத்தேர்வு நடத்தப்படும்என்று பள்ளி கல்வித்துறைதெரிவித்துள்ளது.

தொடர்ந்து மீதமிருக்கும் 40மதிப்பெண்களுக்கு மூன்றுபருவங்களில் பெற்றமதிப்பெண்களின் சராசரிஎடுத்துக்கொள்ளப்படும்என்று தொடக்க கல்விஇயக்ககம் கூறியுள்ளது.


5ம் வகுப்பு மாணவர்களுக்குதமிழ்ஆங்கிலம்கணிதம்ஆகிய மூன்றுபாடங்களுக்கும் மற்றும் 8ம்வகுப்பு மாணவர்களுக்குதமிழ்ஆங்கிலம்கணிதம்,அறிவியல்சமூக அறிவியல்ஆகிய ஐந்து பாடங்களுக்கும்பொதுத்தேர்வு நடத்தப்படும்என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதையடுத்து தேர்வுமையங்களை பொறுத்தவரையில் 5ம்வகுப்பு மாணவர்களுக்கு 1கிலோ மீட்டர்தூரத்திற்குள்ளும் 8ம் வகுப்புமாணவர்களுக்கு 3 கிலோமீட்டர் தூரத்திற்குள்ளும்அமைக்கப்பட வேண்டும்என்று கூறப்பட்டுள்ளது.மேலும் தேவைப்படும்பள்ளிகளில் கூடுதல் தேர்வுமையங்களையும்,போக்குவரத்துவசதிகளையும் ஏற்படுத்தித்தரலாம் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு பணிகள் மாவட்டமுதன்மை கல்விஅலுவலர்கள்தலைமையிலான மாவட்டதேர்வு குழு கண்காணிக்கும்என்றும் தொடக்க கல்விஇயக்ககம் கூறியுள்ளது.பொதுத்தேர்வுமதிப்பெண்களின்அடிப்படையில்மாணவர்களின் தேர்ச்சி,முதல் மூன்றுஆண்டுகளுக்கு நிறுத்திவைக்கப்படாது என்பதையும்தொடக்க கல்வி இயக்ககம்சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:

Post a Comment