ஆசிரியர்களின்விபரங்களை, 'எமிஸ்'இணையதளத்தில்பதிவேற்றி, இடமாறுதல்கவுன்சிலிங்குக்கு தயார்நிலையில் இருக்கும்படி,தலைமைஆசிரியர்களுக்கு, பள்ளிகல்வித் துறைஉத்தரவிட்டுள்ளது.
அரசு பள்ளிஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும், மே மாதம் விருப்பஇடமாறுதல் கவுன்சிலிங்நடத்தப்படும்.குறைந்தபட்சம்ஓராண்டாவது, ஒருபள்ளியில் பணிமுடித்தவர்கள் மட்டுமே,இந்த கவுன்சிலிங்கில்பங்கேற்கமுடியும் என்றவிதி பின்பற்றப்பட்டது.இந்த ஆண்டு அந்த விதிமாற்றப்பட்டு, ஒருபள்ளியில் குறைந்தபட்சம்மூன்று ஆண்டுகள்தொடர்ந்துபணியாற்றியிருக்கவேண்டும் என,அறிவிக்கப்பட்டது.இதைஎதிர்த்து, ஆசிரியர்கள்சிலர்நீதிமன்றத்தில்வழக்குதொடர்ந்தனர்.வழக்கின்முடிவில், வழக்குதொடர்ந்தவர்கள் மட்டும்,ஓராண்டுக்கு அதிகமாகஒரு பள்ளியில்பணியாற்றியிருந்தால்,கவுன்சிலிங்கில்பங்கேற்க அனுமதிவழங்கப் பட்டுள்ளது.
இந்நிலையில்,இடமாறுதல் கவுன்சிலிங்தொடர்பாக, புதியஅரசாணைவெளியிடப்பட்டுள்ளது.அந்த அரசாணைப்படி,வழக்கு தொடராதஆசிரியர்கள், ஒருபள்ளியில் தொடர்ந்து,மூன்று ஆண்டுகள்பணிமுடித்திருந்தால் மட்டுமே,கவுன்சிலிங்கில்பங்கேற்கலாம் என,கூறப்பட்டுஉள்ளது.எனவே,மூன்றாண்டு பணி முடித்தஆசிரியர்களின்விபரங்களை மட்டும்,எமிஸ் என்ற கல்விமேலாண்மைஇணையதளத்தில்சேகரிக்க, தலைமைஆசிரியர்கள்அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இடமாறுதல்கவுன்சிலிங்குக்கு உரியவிபரங்களுடன் தயாராகஇருங்கள்; விரைவில்அறிவிப்பு வெளியாகும்என, பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு, கல்விஅதிகாரிகள்உத்தரவிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment