நாட்டில் நாளுக்கு நாள்கொரோனா தாக்கம்அதிகரித்துக் கொண்டேவரும் வேளையில்,மாநிலத்தில் பள்ளிகள்மீண்டும் திறக்கப்பட்டவுடன்செயல்படுத்தப்படும்வழிகாட்டுதல்களின்தற்காலிக பட்டியலைஎன்.சி.இ.ஆர்.டிசமர்ப்பித்துள்ளது.
என்.சி.இ.ஆர்.டிசமர்ப்பித்துள்ளஅறிக்கையின் படி, பள்ளிதிறந்தவுடன் ஒரு வகுப்பின்மாணவர்கள் ஒன்றாகப்பள்ளிக்கு அழைக்கப்படமாட்டார்கள். வாரத்தில்மூன்று நாட்கள் 'ஆட்' & 'ஈவன்' நம்பர் பார்முலாமுறையில், ரோல் நம்பரின்படி இரண்டு ஷிப்ட்களாகவகுப்புகள் செயல்படும்.
முதலாவதாக 'ஆட்' நம்பரில்இருக்கும் மாணவர்களுக்குவகுப்புகள் நடைபெறும்.இரண்டாவதாக 'ஈவன்'நம்பரில் இருக்கும்மாணவர்களுக்குவகுப்புகள் நடைபெறும்.
இதில், ஒவ்வொருவகுப்புகளுக்கு ஏற்ப தலா 10நிமிடங்கள் இடைவெளிகொடுக்க வேண்டும்.
சமூக இடைவெளியைபின்பற்ற, திறந்த வெளியில்வகுப்புகளை நடத்துவதுநல்லது என்றும் தன்அறிக்கையில்பரிந்துரைத்துள்ளதுஎன்.சி.இ.ஆர்.டி.
6 கட்டங்களாக திறக்கப்படும்பள்ளிகள்:
முதல் கட்டமாக 11 மற்றும்12ஆம் வகுப்புமாணவர்களுக்குப்பள்ளிகள் தொடங்கப்படும்,ஒரு வாரம் கழித்துஇரண்டாம் கட்டமாக 9மற்றும் 10ஆம் வகுப்புமாணவர்களுக்குப்பள்ளிகள் திறக்கப்படும், 2வாரம் கழித்து மூன்றாம்கட்டமாக 6வது முதல் 8ஆம்வகுப்பு வரைவுள்ளமாணவர்களுக்குவகுப்புகள் தொடங்கப்படும்.
நான்காம் கட்டமாக, மூன்றுவாரம் கழித்து, மூன்றாம்வகுப்பு முதல் 5வது வகுப்புமாணவர்களுக்குவகுப்புகள் தொடங்கும். 5ஆம் கட்டமாக, 4 வாரம்கழித்து 1வது மற்றும் 2வதுவகுப்பு மாணவர்களுக்குவகுப்புகள் தொடங்கப்படும்என தெரிவித்துள்ளது.
5 வாரம் கழித்து, அதாவது6து கட்டத்தில், மழலையர்பள்ளி பள்ளிகள் மற்றும்எல்.கே.ஜி மாணவர்களுக்குபெற்றோர்களின்சம்மதத்துடன் வகுப்புகள்தொடங்கப்படும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில்பின்பற்றப்படும்நடவடிக்கைகள் :
ஒரு வகுப்பில் 30 முதல் 35மாணவர்கள் வரை தான்இருக்க வேண்டும், கட்டாயம்மாணவர்களுக்கு இடையேவகுப்பறையில் 4 அடிஇடைவெளி இருக்கவேண்டும். வகுப்பறையில்,ஜன்னல்கள் மற்றும்கதவுகள் திறந்துவைக்கப்பட வேண்டும். ஏ.சிபோடுவதற்கு அனுமதிக்கக்கூடாது. ஒரு மாணவர்அமரும் நாற்காலியில்,வேறோரு மாணவர்அமரக்கூடாது.
மாணவர்கள் தினமும் ஒரேநாற்காலியில் தான் அமரவேண்டும். வகுப்புகள்தொடங்கிய பின் 15நாட்களுக்கு ஒரு முறைகுழந்தையின் முன்னேற்றம்தொடர்பாகபெற்றோர்களிடம் பேசவேண்டும்.
பள்ளி நிர்வாகம்,வகுப்பறைகள் கிருமிநாசினி கொண்டு தினமும்சுத்தம் செய்யப்படுகிறதாஎன்பதை உறுதி செய்யவேண்டும். மாணவர்களும்,ஆசிரியர்களும் பள்ளிக்குள்நுழைவதற்கு முன் ஒருமுறை உடல் வெப்பம்அனைத்தும் பரிசோதனைசெய்து கொள்ள வேண்டும்.மேலும், பெண், பென்சில்,உணவு உள்ளிட்டவற்றைமாணவர்கள் பகிர்ந்துகொள்ளக்கூடாது.ஒவ்வோருவரும் தனியாகதண்ணீர் கேன் கொண்டுவர வேண்டும். முகக் கவசம்அணிவது கட்டாயமானஒன்று..
அதேபோல், மருத்துவத்துறையில் மற்றும்பாதுகாப்புப் பணியில்வேலை செய்யும்பெற்றோர்கள் முன்கூட்டியேஅதனைப் பள்ளிநிர்வாகத்திடம்தெரிவித்திருக்க வேண்டும்.
தொலைப்பேசியில் தொடர்புகொள்ள முடியாதபெற்றோர்கள் மட்டுமேஆசிரியர்களைக் காணஅனுமதிக்கப்படுவார்கள்.பள்ளிகளில் ஒருபோதும்ஆசிரியர்களுடன் எந்தவிதமான சந்திப்பும்பெற்றோர்களுக்கு ஏற்பாடுசெய்யப்படாது.
No comments:
Post a Comment