Sunday, March 31, 2019

100 சதவீதம் தபால் ஓட்டு : 'ஜாக்டோ - ஜியோ' மனு

தேர்தல் பணியில் உள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள், 100 சதவீதம், தபால் ஓட்டளிக்க வழி வகை செய்ய வேண்டும்' என, ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம், மனு கொடுத்துள்ளனர்.

மனு விபரம்:தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள், தங்கள் ஓட்டுகளைப் போட, வழிவகை செய்ய வேண்டும். தபால் ஓட்டில், செல்லாத ஓட்டுகளை தவிர்க்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குளறுபடிகளை தவிர்க்க, தபால் ஓட்டுகளின் எண்ணிக்கையை, வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபடுவோரின் பாதுகாப்பை, உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment