45 சதவிகித மதிப்பெண்களுக்கும் கீழ் UGல் பெற்றவர்கள்இனி TET தேர்வு எழுத முடியாது என்ற TET விதிமுறையைஎதிர்த்து புதுக்கோட்டையை சேர்ந்த சகோதரி தேவி வழக்குதொடுத்து உள்ளார்...
படிக்கும் போது சொல்லப்படாத விதிமுறை வேலைக்காகமுயற்சி செய்யும் போது விதிக்கப்பட்டுகட்டாயமாக்கப்பட்டதால் பல்லாயிரக்கணக்கானஆசிரியர்கள் TET தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல்கவலைக்கு உள்ளானார்கள்.
2012 லிருந்து நம் மாநிலத்தில் 4 முறை TET தேர்வு நடத்தும்போது இந்த விதிமுறை இல்லை. TET தேர்வுகளில் B.Ed .,தேர்ச்சி பெற்றவர்களை அனுமதிச்சாங்க. அதற்கென UGமற்றும் B.Ed ஆகியவற்றில் குறைந்தபட்ச மதிப்பெண்கள்எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
இந்நிலையில் 2019 ம்ஆண்டுக்கான TET தேர்வில் Paper 2 க்குவிண்ணப்பிக்க UGல் OC பிரிவினர் 50% மும் , இதர இடஒதுக்கீட்டுப் பிரிவினர்கள் ( BC /MBC / SC / ST ) அனைவரும்45% முன் பெற்றிருக்க வேண்டும் என TRB புதியவிதிமுறைவகுத்துள்ளது.
இதில் என்ன கொடுமை என்றால் B.Ed., படிக்க UG யில் SC/STக்கு -40%, MBC/DNC-43% தகுதியில் B.Ed., படிக்கஅனுமதிக்கப்பட்டனர் ஆனால் தற்போது இம்முறையால்40% முதல் 45% வரை UG யில் மதிப்பெண் பெற்றோர்தற்போது நடக்கும் TET தேர்வை எழுத முடியாத நிலையில்வழக்கு போட்டு இருக்காங்க.
வழக்கில் என்ன நடக்கும் என்று யோசிக்கிறிங்களா....தேர்வு நடக்கும். விதிமுறையில் மாற்றம் வருமா என்பதைவழக்கு நடக்கும் போது நாம் சொல்ல கூடாது என்பதுவிதிமுறைங்க... வழக்கு ஏப்ரல் 24 ஆம் தேதி விசாரணைக்குவருதாம்...
No comments:
Post a Comment