டி.என்.பி.எஸ்.சி.,யை போல, டி.ஆர்.பி., தேர்விலும் முறைகேடுகள் நடந்துள்ளதால், தேர்வு நடைமுறைகளை மாற்ற, கல்லுாரி பேராசிரியர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, குரூப் - 4 தேர்வில் நடந்த முறைகேடுகள் அம்பலமாகி உளளன. சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து, இடைத்தரகர்கள் மற்றும் அரசு ஊழியர்களை கைது செய்து வருகின்றனர். அதேபோல், ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., நடத்திய, பாலிடெக்னிக் தேர்விலும் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டு, தற்போது மறுதேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அகில இந்திய தனியார் கல்லுாரிகளின் ஊழியர்கள் அமைப்பு சார்பில், அதன் நிறுவனர் பேராசிரியர் கார்த்தி, முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பியுள்ள புகார்: பாலிடெக்னிக் விரிவுரையாளர் பதவியில், 1,060 காலியிடங்களை நிரப்புவதற்கான, டி.ஆர்.பி., தேர்வில், 200க்கும் மேற்பட்டவர்களுக்கு, மதிப்பெண்களை திருத்தி, முறைகேடு நடந்துள்ளது. கேடு செய்த, அனைத்து தேர்வர்கள் மீதும், கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை; தகுதி நீக்கமும் செய்யவில்லை. அவர்கள், பணம் வாங்கிய இடைத்தரகர்களை அணுகுவதாக தெரிய வந்துள்ளது. எனவே, அவர்களை, அரசு பதவியில் சேர தடை விதிக்க வேண்டும்.
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, குரூப் - 4 தேர்வில் நடந்த முறைகேடுகள் அம்பலமாகி உளளன. சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து, இடைத்தரகர்கள் மற்றும் அரசு ஊழியர்களை கைது செய்து வருகின்றனர். அதேபோல், ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., நடத்திய, பாலிடெக்னிக் தேர்விலும் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டு, தற்போது மறுதேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அகில இந்திய தனியார் கல்லுாரிகளின் ஊழியர்கள் அமைப்பு சார்பில், அதன் நிறுவனர் பேராசிரியர் கார்த்தி, முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பியுள்ள புகார்: பாலிடெக்னிக் விரிவுரையாளர் பதவியில், 1,060 காலியிடங்களை நிரப்புவதற்கான, டி.ஆர்.பி., தேர்வில், 200க்கும் மேற்பட்டவர்களுக்கு, மதிப்பெண்களை திருத்தி, முறைகேடு நடந்துள்ளது. கேடு செய்த, அனைத்து தேர்வர்கள் மீதும், கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை; தகுதி நீக்கமும் செய்யவில்லை. அவர்கள், பணம் வாங்கிய இடைத்தரகர்களை அணுகுவதாக தெரிய வந்துள்ளது. எனவே, அவர்களை, அரசு பதவியில் சேர தடை விதிக்க வேண்டும்.
No comments:
Post a Comment