தமிழகத்தில் கடந்த 1.8.2017நிலவரப்படி மாணவர்கள்எண்ணிக்கை அடிப்படையில்பட்டதாரி ஆசிரியர்களுக்கானபணியாளர் நியமனம்மேற்கொள்ளப்பட்டதில்பாடவாரியாக ஆசிரியர்களின்றிஉபரி என கண்டறியப்பட்டபணியிடங்களை சரண் செய்துஇயக்குநரின் பொது தொகுப்பிற்குஒப்படைக்க அந்தந்த மாவட்டகல்வி அலுவலர்களுக்கு தமிழகபள்ளி கல்வி இயக்குநர்உத்தரவிட்டிருந்தார்.அதன்அடிப்படையில் ஆசிரியர்களின்றிஉள்ள உபரி காலி பணியிடங்கள்மாவட்ட முதன்மை கல்விஅலுவலர்களால் ஒப்படைக்கப்பட்டுபள்ளி கல்வி இயக்குநரின் பொதுதொகுப்பிற்கு கொண்டுசெல்லப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்டு பள்ளிகல்வி இயக்குநர் ஆணைபிறப்பித்துள்ளார். அந்த வகையில்தமிழகம் முழுவதும் அரசு,நகராட்சி,உயர்நிலை, மேல்நிலைபள்ளிகளில் பட்டதாரிஆசிரியர்களின் உபரி காலிபணியிடங்கள் 3894 எனபட்டியலிடப்பட்டு சரண்செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ்686, ஆங்கிலம் 334, கணிதம் 676,அறிவியல் 1177, சமூக அறிவில்690, இதர பாட பிரிவுகள் 66ஆசிரியர் பணியிடங்களும்உபரியாகியுள்ளன. மேலும்இடைநிலை ஆசிரியர் பிரிவில் 265ஆசிரியர்கள் உபரி என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.அதிகபட்சமாக வேலூர்மாவட்டத்தில் 465, திருவண்ணாமலை மாவட்டத்தில்439 பணியிடங்கள் ஆசிரியர்கள்இல்லாமல் உபரி என்ற பட்டியலில்இடம்பெற்றுள்ளது.
இந்த காலி பணியிடங்களை இனிவரும் காலங்களில் பள்ளி கல்வித்துறை சார்பில்நடைபெறுகின்ற ஆசிரியர்கள்பொதுமாறுதல் கலந்தாய்வின்போதுகாலி பணியிடங்களாககாண்பிக்ககூடாது என்று முதன்மைகல்வி அலுவலர்களுக்கு பள்ளிகல்வி இயக்குநரால்உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும்பள்ளிகளின் தலைமைஆசிரியர்கள் கவனத்திற்கு இதனைகொண்டு செல்வதுடன்சம்பந்தப்பட்ட பள்ளிகளின்பராமரிக்கப்படுகின்ற அளவைபதிவேட்டில் (ஸ்கேல்ரெஜிஸ்டர்)திருத்தம் செய்துகொள்ள வேண்டும்என்று பள்ளி கல்வி இயக்குநர்உத்தரவிட்டுள்ளார்.
இந்த சரண்டர் செய்யப்பட்டபணியிடங்களை புதியதாகநியமிக்கப்படும் கணினி ஆசிரியர்பணி நியமனத்திற்கு பயன்படுத்தகல்வித்துறை திட்டமிட்டுள்ளது.அந்த வகையில் 800க்கும் மேற்பட்ட கணினி ஆசிரியர்பணியிடங்களில் ஆசிரியர்கள்நியமிக்கப்பட உள்ளனர். அரசுபள்ளிகளில் மாணவர்கள்எண்ணிக்கை குறைந்ததால்ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரஅடிப்படையில் இந்தபணியிடங்கள் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால்அவை திரும்ப ஒப்படைக்கப்பட்டுஇருப்பதாகவும் கல்வித்துறைவட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment