தமிழகத்தின் அரசு தொடக்க,நடுநிலை, உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளில் 10ஆண்டுகளுக்கும் மேல்காலியாகஉள்ள அலுவலக உதவியாளர்,இரவுக்காவலர் பணியிடங்களைஉடனடியாக நிரப்ப வேண்டும்என்று கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் மாநகராட்சி நகராட்சி,அரசு உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகள் எனமொத்தம் 7,728 பள்ளிகள்உள்ளன.6ஆயிரம் தொடக்க,நடுநிலைப்பள்ளிகள் உள்ளன.இதில், உயர்நிலைப் பள்ளிகளில் 17 லட்சத்து 19 ஆயிரத்து 322மாணவர்களும், மேல்நிலைப்பள்ளிகளில் 68 லட்சத்து 12ஆயிரத்து 953 மாணவர்களும்,நடுநிலைப் பள்ளிகளில் 8 லட்சத்து95 ஆயிரத்து 29 மாணவர்களும்,ஆரம்ப பள்ளிகளில்29 லட்சத்து 10ஆயிரத்து 351 மாணவர்கள்தொடக்கப்பள்ளி, அரசு நிதிஉதவிப்பள்ளி, தனியார் பள்ளிகள்என மொத்தம் 1 கோடியே 31லட்சத்து 85 ஆயிரத்து 526 மாணவ,மாணவிகள் கல்வி பயின்றுவருகின்றனர். தமிழகத்தில்மாணவர்களின் கல்வித்திறனைமேம்படுத்துவதற்கானநடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டுவருகிறது. குறிப்பாக 10, 11 மற்றும்12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள்நல்ல முறையில் கல்வி கற்று உயர்கல்வி கற்கவும், போட்டித்தேர்வுகளில் சிறந்து விளங்கவும்கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.அதற்கேற்ப பாடத்திட்டங்கள்திருத்தியமைக்கப்பட்டு புதியபாடநூல்கள் வழங்கப்பட்டுவருகிறது. குறிப்பாக ஒவ்வொரு பருவத் தேர்வுக்கும் தனித்தனிஅலகுகளாக பாடங்கள்பயிற்றுவிக்கப்படுகிறது.மாணவர்களுக்கு எளிதாக கல்வியைகற்பிக்கும் வழிமுறைகள் குறித்துஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சிகள்அளிக்கப்பட்டுள்ளது.
பெற்றோர்களின் தனியார் பள்ளிமோகத்திற்கு முற்றுப்புள்ளிவைக்கும் வகையில் தமிழகம்முழுவதும் உள்ள அரசு நடுநிலைமற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்அதிநவீன கட்டமைப்புவசதிகளுடன் கூடிய வகுப்பறைகள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும்,கல்வி கற்கும் மாணவர்களுக்கானபாடங்களைதிரைவடிவில்செயல்முறை விளக்கத்துடன்பயிற்றுவிக்கப்படுகிறது. மேலும், 1முதல் 12ம் வகுப்பு வரை ஒரேபள்ளியில் படிக்கும் வசதி,அங்கன்வாடி மையங்கள் நர்சரி பள்ளிகளாக தரம் உயர்த்துவதற்கானபணிகள் முழுவீச்சில் நடந்துவருகிறது. இதன் தொடர்ச்சியாகமத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டிதிட்டத்தில் இடம்பிடித்துள்ளமாநகராட்சி பள்ளிகளில்வகுப்பறைகளை டிஜிட்டல்வகுப்பறைகளாக தரம்உயர்த்துவதற்கான நடவடிக்கைகள்எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு நிகராகஅரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்என்ற அரசின் முடிவு மகிழ்ச்சியைஏற்படுத்தினாலும், அரசுபள்ளிகளுக்கான கட்டமைப்புவசதிகளில் இன்னும் குறைபாடுகள்இருப்பதாக ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தமிழகம்முழுவதும் 3,688 அரசு உயர்நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில்,அலுவலக உதவியாளர், இரவுக்காவலர் உள்ளிட்ட 3000க்கும்மேற்பட்ட பணியிடங்கள் கடந்த 10ஆண்டுகளுக்கும் மேலாக நிரப்பப்படாமல் உள்ளது. இதனால்பள்ளி அலுவலகம் தொடர்பானபணிகள் செய்து முடிப்பதில்சுணக்கம் ஏற்படுகிறது. பள்ளிவளாகத்தின் தூய்மை, மாணவர்வருகைப்பதிவேடு, வகுப்பறைகள்பராமரித்தல், அரசின் உத்தரவுகள் தொடர்பான சுற்றறிக்கைகளைவகுப்புவாரியாக கொண்டுசெல்லுதல் உட்பட 14 வகையானபணிகள் பாதிக்கப்படுகிறது.காலைபள்ளி தொடங்கும் நேரம், இறைவணக்கம், பாடவாரியானவகுப்புகளுக்கு நேரம் ஒதுக்கீடுசெய்வது, உணவு இடைவேளை,பள்ளி முடியும் நேரம் போன்றகாலநேரங்களில் மணிஅடிப்பதற்கும் பணியாளர்கள்இல்லை. இதனால் தலைமைஆசிரியர்களும், மாணவர்களும்அனைத்து பணிகளை செய்யவேண்டிய அவல நிலைதொடர்கிறது. அதேபோல்,பள்ளிகளுக்கான பகல், இரவுகாவலுக்கான பணியாளர்கள்இல்லாததால் யாரும், எப்போது வேண்டுமானாலும் பள்ளிக்குள்நுழையும்நிலையில் பாதுகாப்பற்றநிலையில் உள்ளது.
இதனால் வெளிநபர்கள் நடமாட்டம்காணப்படுவதோடு மாணவர்களின்பாதுகாப்பும்கேள்விக்குறியாகியுள்ளது.அதேபோல் இரவுக் காவலர்கள்இல்லாத பள்ளிகளில் இரவுநேரங்களில் அத்துமீறி சுவர் ஏறிகுதிக்கும் மர்ம நபர்கள்கல்விக்கூடத்தை இலவசமதுகுடிக்கும் கேளிக்கை விடுதியாகமாற்றி வருகின்றனர்.மதுபோதையில் இறைச்சிக்கழிவுகளைவகுப்பறைகளில் வீசுவது, காகிதக்குப்பைகளை தீயிட்டு எரிப்பதுபோன்ற அத்துமீறல்கள் தொடர்ந்துநடந்து வருகிறது. மேலும், தலைமைஆசிரியர் அறையின் பூட்டைஉடைத்துஒலிப்பெருக்கி சாதனம், கேடயம், இரும்பு பெட்டகத்தில்இருப்பு வைக்கப்பட்டிருந்த பணம்,சத்துணவு கூடத்தில் சேமித்துவைக்கப்படும் உணவுப் பொருட்கள்,சமையல் பாத்திரங்கள்ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்செல்லும் சம்பவங்களும் நடந்தேறுகிறது.
இதன் மூலம் மாணவர்கள் மற்றும்பள்ளிகளின் உடமைகளுக்கும்பாதுகாப்பு என்பதுகேள்விக்குறியாகி உள்ளது. எனவே,மாநிலம் முழுவதும் அரசு தொடக்க,நடுநிலை, உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளில் 10ஆண்டுகளுக்கும் மேல் காலியாகஉள்ள அலுவலக உதவியாளர்,இரவுக்காவலர் பணியிடங்களைஉடனடியாக நிரப்ப வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களும்,ஆசிரியர்களும், மாணவ,மாணவிகளும் எதிர்பார்க்கின்றனர்.
பள்ளிகளின் கட்டமைப்பைவலுப்படுத்த திட்டமில்லைஅரசுபள்ளிகளில் சுத்தமான குடிநீர்வழங்கும் வகையில் குடிநீர்சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவும்,பள்ளிகளில் இருபாலருக்கும்தேவையான கழிப்பறைகள்அமைக்கவும் உரிய ஆய்வு செய்துபள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில்தெரிவிக்கப்பட்டது. ஆனால்பெரும்பாலான அரசு பள்ளிகளில்இன்றுவரை போர்வெல் கிணற்றில்உள்ள தண்ணீரையே மாணவர்கள்பயன்படுத்த வேண்டிய நிலைதொடர்கிறது. அதேபோல்,கழிப்பறைகளை தூய்மையாகபராமரிப்பதற்கு போதியளவில்பணியாளர்கள் இல்லாததால்தொற்றுநோய் கூடாரமாகவே அரசுபள்ளி கழிப்பறைகள் காட்சிஅளிக்கிறது.
ஒருசில பள்ளிகளில் கழிப்பறைகள்பாழடைந்த நிலையில் உள்ளது.அதனை சீரமைக்கும் முயற்சிகள்இல்லாததால் திறந்தவெளிமைதானம் கழிப்பிடமாகமாறியுள்ளது. மொத்தத்தில் அரசுபள்ளிகள் கல்வித் தரத்தில் சற்றுமுன்னேறினாலும், சுகாதாரம்,பள்ளிகள் சீராக இயங்குவதற்கானஅடிப்படை கட்டமைப்பு வசதிகளில்எந்த முன்னேற்றமும் இல்லை என்றுசமூக ஆர்வலர்கள் வேதனைதெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment