உயர்நிலைப்பள்ளிகளில் 295வேதியியல்ஆசிரியர்பணியிடங்களின்எண்ணிக்கையை டிஆர்பி நிர்வாகம்திட்டமிட்டு குறைத்துக் காட்டுவதாகதேர்வர்கள்குற்றம்சாட்டியுள்ளனர்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தால்பிளஸ்1, பிளஸ் 2மாணவர்களுக்கான 387 வேதியியல்ஆசிரியர் பணியிடங்களுக்கானஆட்தேர்வு செய்வதற்கானஅறிவிக்கை 2016ம் ஆண்டுவெளியிடப்பட்டது.
முதுகலை வேதியியல், பி.எட் படித்தவர்கள் இந்த தேர்வுக்குவிண்ணப்பித்தனர். இதற்காகஎழுத்துத்தேர்வு 2017ம் ஆண்டுநடந்தது. தேர்வு நடந்து ஒரு வாரகாலத்துக்குபின், தற்காலிகவிடைக்கையேடுவெளியிடப்பட்டது. அதில்6கேள்விகள் தவறாக உள்ளது தொடர்பாக தேர்வர்கள்டிஆர்பிநிர்வாகத்திடம் ஆட்சேபனைதெரிவித்தனர். குறிப்பிட்டகேள்விகளுக்கு மதிப்பெண்அளிக்க டிஆர்பி நிர்வாகம் மறுத்தநிலையில், தென் மாவட்டத்தைசேர்ந்த தேர்வர்கள் 6 பேர் சென்னைஉயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்வழக்கு தொடர்ந்தனர். அந்தவழக்கு விசாரணை நடந்துவந்தபோதே, சமுதாய பிரிவுவாரியாக மதிப்பெண் தகுதி பெற்ற, 92 பேரின் சான்றிதழ்சரிபார்க்கப்பட்டு அவர்களுக்குபணிநியமன ஆணைவழங்கப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றமதுரைக்கிளையில் நடந்தவிசாரணையில் 4 கேள்விகள்தவறாக கேட்கப்பட்டதுஉறுதியானது. அதற்கு உரியமதிப்பெண் வழங்குவதாக டிஆர்பிஅதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.அதைத்தொடர்ந்து குறிப்பிட்ட 6தேர்வர்களுக்குமதிப்பெண்வழங்கப்பட்டது. இதேகோரிக்கையுடன் சென்னைஉயர்நீதிமன்றத்தில் தேர்வர்கள்வழக்கு தொடர்ந்தனர்.அந்த வழக்குவிசாரணைக்கு வந்த போது,உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின்உத்தரவை கருத்தில் கொண்டு,குறிப்பிட்ட தேர்வர்களுக்குமதிப்பெண் வழங்குமாறு சென்னைஉயர்நீதிமன்றம் டிஆர்பிக்குஅறிவுறுத்தி வழக்கை முடித்துவைத்தது. தேர்வர்கள் டிஆர்பிநிர்வாகத்தில் முறையிடுமாறும்உத்தரவிட்டது.
இதுதொடர்பாக குறிப்பிட்டதேர்வர்கள் டிஆர்பி நிர்வாகத்தைதொடர்புகொண்டபோது,குறிப்பிட்ட வழக்கில்மதுரைக்கிளையில் வழக்குதொடர்ந்த தேர்வர்களுக்கு மட்டுமேமதிப்பெண் வழங்க முடியும் என்றுஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அனைத்து காலிப்பணியிடங்களும்நிரம்பிவிட்டதாக டிஆர்பிதேர்வர்களுக்கு எழுத்துப்பூர்வபதிலளித்துள்ளது. வெறும் 92இடங்கள் மட்டுமே நிரப்பிவிட்டு,மீதமுள்ள 295 இடங்களைகாலிப்பணியிடங்கள் பட்டியலில்டிஆர்பி நிர்வாகம் காட்டவில்லை.
இதனால் தங்களுக்கானபணியிடங்களை வேறு நபர்களுக்குடிஆர்பி அதிகாரிகள் முறைகேடாகவிற்பனை செய்திருக்கலாம் எனதேர்வர்கள்குற்றம்சாட்டியுள்ளனர்.ஆசிரியர்தேர்வு வாரியத்தில் ஏற்கனவேபாலிடெக்னிக் விரிவுரையாளர்தேர்வில் மதிப்பெண் முறைகேடுநடந்தது உறுதி செய்யப்பட்டு,குறிப்பிட்ட தேர்வு சிலமாதங்களுக்கு முன் ரத்துசெய்யப்பட்டதோடு,அதுதொடர்பாக விசாரணை நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.
தேர்வாணையத்தின் விடைகையேடு இறுதியானதா?
ஆசிரியர் தேர்வு வாரியத்தை போல்டிஎன்பிஎஸ்சி நிர்வாகமும் தேர்வுமுடிந்ததும், தற்காலிகவிடைக்கையேடு வெளியிட்டு,ஆட்சேபனைகளை பெற்று இறுதிவிடைக் கையேடு வெளியிடுகிறது.அதற்கு இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.தேர்வாணையத்தின் 2வதுவிடைக்கையேடே இறுதியானதுஎன்று டிஎன்பிஎஸ்சிதெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment