கோவையில், 53 பள்ளிகள் ஒரே வளாகத்தில்
செயல்படுவதால், அங்குள்ள தொடக்கப்பள்ளிதலைமையாசிரியரை,
கற்பித்தல் பணிகளில்ஈடுபடுத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
கற்பித்தல் பணிகளில்ஈடுபடுத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
தமிழகம் முழுக்க, ஒரே வளாகத்தில் செயல்படும்உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளின் பட்டியல்திரட்டப்பட்டுள்ளது.
இதில், 3 ஆயிரத்து 133 பள்ளிகள்கண்டறியப்பட்டுள்ளன.இங்கு, தொடக்கவகுப்புகளுக்கு தனியாகவும், உயர்நிலை அல்லதுமேல்நிலை வகுப்புக்கு தனியாகவும் என, இருதலைமையாசிரியர்கள் உள்ளனர்.ஒரே வளாகத்தில்செயல்படும் இரு பள்ளிகளுக்கு, இருதலைமையாசிரியர்கள் இருப்பதால், நிர்வாகரீதியாக, சில சிக்கல்கள் இருப்பதுதெரியவந்துள்ளது.
எனவே, ஒரு தலைமையாசிரியரின் கீழ், அனைத்துவகுப்புகளையும் இணைக்கமுடிவெடுக்கப்பட்டுள்ளது. கோவையில், 53உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், ஒரேவளாகத்தில் செயல்படுகின்றன.
இங்குள்ள தொடக்கப்பள்ளிதலைமையாசிரியர்களை, கற்பித்தல் பணிகளில்ஈடுபடுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதோடு, ஒரே தலைமையாசிரியர், உதவிதலைமையாசிரியர் மூலம், நிர்வாக பணிகளைமேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
சி.இ.ஓ.,க்கள் கருத்துசென்னையில் சமீபத்தில்நடந்த, முதன்மை கல்வி அலுவலர்களுக்கானகூட்டத்தில், முதன்மை செயலாளர் பிரதீப்யாதவ் இதுகுறித்து விவாதித்துள்ளார்.தரம் உயர்த்தப்படும்பள்ளிகளில், இனி ஒரு தலைமையாசிரியர்பணியிடம் மட்டுமே உருவாக்கலாம் என,இக்கூட்டத்தில் சி.இ.ஓ.,க்கள் கருத்துதெரிவித்துள்ளனர். இதை கல்வித்துறை பின்பற்றமுடிவெடுத்துள்ளது.
அதிகாரபூர்வ தகவல் வந்தால் தெரியும்'மாவட்டமுதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணனிடம்கேட்டபோது,''கோவையில் 53 பள்ளிகள் ஒரேவளாகத்தில் செயல்படுகின்றன. இதன் பட்டியலை,வட்டார வாரியாக, இயக்குனரகத்துக்குசமர்ப்பித்துள்ளோம். தலைமையாசிரியர்களைகற்பித்தல் பணிகளில், ஈடுபடுத்துவது குறித்து,அதிகாரபூர்வ தகவல் வெளியிட்டால் தான்தெரியவரும்,'' என்றார்.
No comments:
Post a Comment