Tuesday, April 30, 2019

தமிழில் நீட் தேர்வு எழுதுவோருக்கு தமிழகத்திலேயே தேர்வுமையங்கள் ஒதுக்கீடு: பள்ளிகல்வித்துறை

தமிழில் நீட் தேர்வு எழுதுவோருக்கு தமிழகத்திலேயே தேர்வுமையங்கள் ஒதுக்கீடு செய்து தமிழக
பள்ளிகல்வித்துறை செவ்வாய்கிழமை நடவடிக்கை எடுத்துள்ளது.
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஹால் டிக்கெட்கள் கடந்த 15-ஆம் தேதி தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
இதற்கிடையே பல மாணவர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளில் பிழைகள் இருப்பதாகத் தகவல்கள் கிடைத்தன. இதுதொடர்பாக பள்ளிகல்வித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டதாவது:
நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டில் ஏற்பட்ட பிழைகள் சரிசெய்யப்பட்டு விட்டது.

பிழைகள் இருந்தால் மாணவர்கள் மே 3-ஆம் தேதிக்குள் ஹால் டிக்கெட்டை சரி செய்துகொள்ள அறிவறுத்தப்படுகின்றனர்.
தமிழில் நீட் தேர்வு எழுதுவோருக்கு தமிழகத்திலேயே தேர்வுமையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆங்கில வழியில் தேர்வு எழுதும் சிலருக்கு மட்டும் அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

No comments:

Post a Comment