Thursday, April 11, 2019

TRB - ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட பேராசிரியர் பணிக்கான அறிவிப்பை ரத்து செய்து உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

தமிழகம் முழுவதும் சட்டக் கல்லுரிகளுக்கு 186 உதவிபேராசிரியர் பணிக்கான அறிவிப்பு ரத்துசெய்யப்பட்டுள்ளதுஆசிரியர் தேர்வு வாரியத்தின்அறிவிப்பை ரத்து  செய்து சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.

 தமிழகத்தில் உள்ள சட்டக்கல்லூரிகளுக்கு 186 உதவிமற்றும் இணை பேராசிரியர்கள் நியமனத்துக்கு  அரசுசட்டக்கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான அறிவிப்பில்பழங்குடியினருக்கு இடஒதுக்கீட்டை பரிசீலிக்கும் படி சட்டபல்கலைக்கழகத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும்அது பரிசீலிக்கப்படவில்லை என வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிஎஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு கடந்த பிப்ரவரி மாதம்விசாரணைக்கு வந்ததுஅப்போதுதமிழகத்தில் உள்ளசட்டக்கல்லூரிகளுக்கு 186 உதவி மற்றும் இணைபேராசிரியர்கள் நியமனத்துக்கு இடைக்காலத் தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டார்.இதையடுத்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போதுஅரசு சட்டக்கல்லூரிமற்றும்பல்கலைக்கழகத்தில் எஸ்.டி பிரிவை சேர்ந்தபேராசிரியர்கள் நியமிக்கப்படாதது அதிர்ச்சியைஅளிக்கிறது என நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.
  
நாடு சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகளை கடந்தும் ஒருவர்கூட நியமிக்கப்படாதது அதிர்ச்சியளிக்கிறது என நீதிபதிதெரிவித்துள்ளார்எஸ்.டிபிரிவை சேர்ந்த ஒருவர் கூடபேராசிரியராக நியமிக்காததை சட்டத்துறை அதிகாரிகள்,சட்டக்கல்வி இயக்குனர்சட்ட அமைச்சர் என யாருமேகவனிக்கவில்லை என்பதே உண்மை என்று கூறிய நீதிபதி,இடஒதுக்கீட்டு கொள்கை அனைத்து மட்டங்களிலும்அமலாவதை சட்ட அமைச்சர் உறுதி செய்ய வேண்டும்என்று உத்தரவிட்டார்ஏழைகளுக்கும்ஒடுக்கப்பட்டமக்களுக்கும் பாடுபடுவதாக அரசியல் கட்சிகள்கூறுகின்றனர்ஆனால் பல கட்சிகள் ஆட்சிசெய்தபோதிலும் பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவர் கூடபேராசியராக நியமிக்கப்படவில்லைபழங்குடியினர்ஒருவர் கூட சட்டக்கல்லுரிகளில் பேராசிரியராகநியமிக்கப்படாதது ஏன்என நீதிபதி கேள்விஎழுப்பியுள்ளார்இதையடுத்துசட்டக் கல்லுரிகளுக்கு 186உதவி பேராசிரியர் பணிக்கான அறிவிப்பை ரத்து செய்துஉத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment