தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு மாவட்டக் கல்வி அலுவலகநேர்முக உதவியாளர் திருவள்ளு வன் பணியிடை நீக்கம்செய்யப் பட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு உதவிபெறும்பள்ளிகளில் 1995 முதல் 1998ம் ஆண்டு வரை யிலானகாலத்தில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் விதிகளுக்குப் புறம்பாக 42 பட்டதாரி ஆசிரியர்கள் தனியார்பள்ளி நிர் வாகங்களால் நியமிக்கப்பட்டனர்.
அவ்வாறு விதிகளுக்கு புறம்பாக நியமிக்கப்பட்டவர்களில்12 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியில் நியமிக்கப்பட்ட1995 முதலான காலத்தை கணக்கில் கொண்டு ரூ.1.25கோடியை சம்பள மாக வழங்க அரசு கருவூலத்துக்குதொடக்கக் கல்வி இயக்குநர் உத்தர விட்டதாக தஞ்சாவூர்மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் சிலர் போலிஉத்தரவை தயார் செய்தது தகவல் அறியும் உரிமைச் சட்டம்மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. இந்நிலையில், ஒரத்தநாடுமாவட்டக் கல்வி அலுவலக நேர் முகஉதவியாளர்திருவள்ளுவன் தற்போது பணியிடை நீக்கம்செய்யப்பட்டுள்ளார். இயக்குநரின் பெயரில் போலிஉத்தரவுதயார் செய்து மோசடி செய்ததாகக் கூறப்படும்விவகாரமே இதற்கு காரணம் எனத் தெரிகிறது.இதுகுறித்து பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர்தொகுதி) நாகராஜ முருகன் வெளி யிட்ட அறிவிப்பில், ‘‘முறைகேடாக கையொப்பமிட்ட விவகாரத்தில் ஒரத்தநாடுமாவட்டக் கல்வி அலுவலக நேர்முக உதவியாளர்திருவள்ளுவனுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது.
அதுதொடர்பான விசாரணை யில் அவர் மீதானகுற்றச்சாட்டு நிரூபணமாகியுள்ளது. இதை யடுத்துபணியில் இருந்து திரு வள்ளுவன் இடைநீக்கம் செய்யப்படுகிறார். மேலும், இயக்குநரகத் தின் முறையான அனுமதிபெறா மல் வெளியூர்களுக்கு செல்லக் கூடாது’’ என்றும்தெரிவிக்கப் பட்டுள்ளது.இயக்குநரின் பெயரில் போலிஉத்தரவு தயார் செய்து மோசடி செய்ததாகக் கூறப்படும்விவகாரமே இதற்கு காரணம் எனத் தெரிகிறது.
No comments:
Post a Comment